திருப்பூர், அக். 15 - திருப்பூரில் மத்திய அரசின் வளர்ச்சித் திட்டப் பணிகள் பற்றிய ஆய்வுக் கூட்டம் இம்மாவட்டத் தைச் சேர்ந்த எம்.பி.க்கள் தலை மையில் நடைபெற்றது. இதில் ஸ்மார்ட் சிட்டி, ஊரக வேலை வாய்ப்பு திட்டம் உள்ளிட்ட வளர்ச் சிப் பணிகள் பற்றி ஆய்வு செய்யப் பட்டது. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாயன்று மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன் தலைமையில் நடைபெற்றது. இதில் ஈரோடு எம்.பி., கணேச மூர்த்தி, பொள்ளாச்சி எம்.பி., சண் முகசுந்தரம் ஆகியோர் பங்கேற் றனர். இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலர் சுகு மாரன், மாநகராட்சி ஆணையர் க.சிவக்குமார் உள்பட அரசு அதி காரிகள் பங்கேற்றனர். மத்திய வளர்ச்சிப் பணிகள், திட்டங்கள் நிறைவேற்றத்தைக் கண்காணிப்பதற்காக மத்திய அரசின் மூலம் இந்த குழு அமைக் கப்பட்டுள்ளது. அந்தந்த மாவட் டங்களில் நாடாளுமன்ற உறுப் பினர்கள் தலைவர்களாகச் செயல் படுவர். மாவட்டத்துக்குட்பட்ட இதர நாடாளுமன்ற உறுப்பினர் கள் இணைத்தலைவர்களாக இருப்பர். மாவட்ட ஆட்சியர் உறுப் பினர் செயலராக செயல்படுவார். இதில் வருவாய், நில அளவை, நகர்ப்புற வளர்ச்சி, குடிநீர், ஊரக வளர்ச்சி, கல்வி, சமூக நலம், வேளாண்மை, மின்சாரம், சுகா தாரம் உள்ளிட்ட துறைகளின் கீழே செயல்படுத்தப்படும் 20 மத்திய திட்டங்கள் செயலாக்கப் படுவது பற்றி கண்காணிக்கப் படும். திருப்பூரில் நடைபெற்ற கூட் டத்தில் மாநகராட்சியில் நிறை வேற்றப்படும் ஸ்மார்ட் சிட்டி திட் டம், கிராமப்புற நூறு நாள் வேலை திட்டம் மற்றும் இதர பணிகள் பற்றி கே.சுப்பராயன், அ.கணேச மூர்த்தி மற்றும் சண்முகசுந்தரம் ஆகியோர் கருத்துகளைக் கூறி னர். நாடாளுமன்ற உறுப்பினர் கள் சொன்ன கருத்துகள், ஆலோ சனைகளை கவனத்தில் கொண்டு வளர்ச்சிப் பணிகளை நிறைவேற் றும்படி ஆட்சியர் விஜய கார்த்தி கேயன் கூறினார்.
பங்கேற்காத எம்எல்ஏக்கள்
இக்கூட்டத்தில் மாவட்டத்தை சேர்ந்த தொகுதி எம்எல்ஏக்கள் உறுப்பினர்களாக பங்கேற்க லாம். எனினும் திருப்பூரில் நடை பெற்ற கூட்டத்தில் காங்கேயம் எம்எல்ஏ உ.தனியரசு மட்டும் கலந்து கொண்டார். பிற தொகுதி களைச் சேர்ந்த ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் யாரும் பங்கேற்க வில்லை. இது குறித்து விசாரித்த போது, இரு தொகுதிகளில் இடை தேர்தல் பிரச்சாரத்துக்காக சென்று விட்டதால், இக்கூட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும் என அவர்கள் கேட்டதாகவும், ஆனால் முன்கூட் டியே திட்டமிடப்பட்ட இக்கூட் டத்தை ஒத்திவைக்க இயலாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இடைத்தேர்தல் பிரச் சாரத்துக்கு சென்றுவிட்ட நிலை யில், ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் யாரும் இதில் பங்கேற்கவில்லை. அதேசமயம் எ ம்.பி.க்கள் எதிர் கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருக்கும் நிலையில், மாவட்ட நிர் வாகத்தைச் சேர்ந்தவர்களும் இந்த ஆய்வுக் கூட்டத்தை நடத்துவதில் உரிய அக்கறை காட்டாமல் இருந் ததாக குற்றச்சாட்டும் எழுந்துள் ளது.