tamilnadu

img

ரேசன் இலவசம் மோடி அறிவிப்பு : நியாயவிலைக் கடைகளில் குழப்பம்

திருப்பூர், ஜூலை 1 - நவம்பர் மாதம் வரை ரேசன் பொருட்கள்  இலவசமாக வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்த நிலையில், ஜூலை மாதம் ரேசன் பொருட்கள் வாங்க நியாயவிலைக் கடைக்கு  வந்த மக்களிடம் பணம் வசூலிக்கப்பட்டதால் மோடி அறிவித்த நிலையில் பணம் வசூ லிப்பதா என்று கேள்வி எழுப்பினர். கொரோனா ஊரடங்கு மார்ச் 25 ஆம் தேதி  முதல் அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழகத் தில் ஏப்ரல், மே மற்றும் ஜூன் ஆகிய மூன்று  மாதங்களுக்கு ரேசன் பொருட்கள் இலவ சமாக வழங்கப்படும் என தமிழக அரசு அறி வித்து இருந்தது. அதன்படி மூன்று மாதங் கள் அரிசி மற்றும் சர்க்கரை கார்டு தாரர்களுக்கு இலவசமாக பொருட்கள் விநி யோகம் செய்யப்பட்டன. இந்நிலையில், ஜூன் 30ஆம் தேதி செவ்வா யன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி நவம்பர் மாதம் முடிய ரேசன் பொருட்கள் மக்களுக்கு இலவசமாக வழங் கப்படும் என்று அறிவித்தார். ஜூலை மாதம்  தொடங்கிய நிலையில் புதனன்று திருப்பூரில்  உள்ள ரேசன் கடைகளுக்கு மக்கள் இலவச மாக பொருட்கள் பெறலாம் என வந்தனர்.

ஆனால் கடைகளில் விற்பனையாளர்கள் விலையில்லா அரிசி தவிர சர்க்கரை, பருப்பு, எண்ணெய் ஆகியவற்றுக்கு பணம் தர வேண்டும் என கூறியுள்ளனர். “மோடி நேற்றுத்தான் அறிவித்தார், ஆனால் நீங்கள் பணம் கேட்கிறீர்களே?” என்று விற்பனையாளர்களிடம் பெண்கள் கேள்வி எ ழுப்பினர். ஆனால் அது குறித்து தங்களுக்கு எந்த உத்தரவோ, சுற்றறிக்கையோ வர வில்லை. மாறாக, நுகர்பொருள் வாணிபக் கழகம் மற்றும் வழங்கல் துறை மூலம் வாட்ஸ் ஆப் மூலம் தகவல் அனுப்பப் பட்டுள்ளது. அதில், “இதர பொது விநி யோகத் திட்ட பொருட்களான சர்க்கரை, பாமா யில் மற்றும் துவரம்பருப்பு ஆகியவற்றை அரசு நிர்ணயித்த விலைக்கு விநியோகம் செய் யலாம்.” என தெளிவாகக் குறிப்பிடப் பட்டுள்ளது என்று கடை விற்பனையாளர்கள் தெரிவித்தனர். இவ்வாறு மோடியின் அறிவிப்பினால் நியாயவிலைக் கடைகளில் விற்பனையாளர் களுக்கும், பொது மக்களுக்கும் இடையே வாக்குவாதமும், குழப்பமும்தான் ஏற் பட்டது. இது குறித்து தமிழக அரசு தெளிவு படுத்த வேண்டும் என்று இரு தரப்பினரும் கூறினர்.