திருப்பூர் மாவட்டத்தில் 1360 பேர் கொரோனா முன்னெச்சரிக்கையாக வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இம்மாவட்டத்தில் மொத்தம் 6 பேர் கொரோனா நோய் தாக்குதல் அறிகுறியுடன் இருந்ததாகவும், ஆய்வகம் பரிசோதனையில் ஒருவருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டு கோவை ஈஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மற்ற ஐந்து பேருக்கு கொரோனா தாக்குதல் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.
மாவட்ட அரசு மருத்துவமனையில் 15 சிறப்பு படுக்கைகள், 50 கூடுதல் படுக்கைகள், 7 செயற்கை சுவாசம் அளிக்கும் வெண்டிலேட்டர்கள், 15 மல்டிபாரா மாணிட்டர் கருவிகள் தயார் நிலையில் உள்ளன. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மொத்தம் 86 வெண்டிலேட்டர்கள் உள்ளன என்று அமைச்சர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்