திருப்பூர், ஆக.10 – ரஷ்யாவில் மருத்துவம் படித்து வந்த தமிழக மாண வர்கள் நால்வர் நதியில் மூழ்கி உயிரிழந்தனர். அவர்களது உடலைத் தாயகம் கொண்டு வர அரசு உரிய ஏற்பாடு செய்ய வேண்டுமென உயிரிழந்தவரின் குடும்பத்தார் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தாலுகா கொளிஞ்சிவாடி சொக்கநாத பாளையத்தைச் சேர்ந்தவர் முகமது ரபி என்பவரின் மகன் முஹம்மது ஆசிக் (வயது 22). இவரும், சென்னையைச் சேர்ந்த ஸ்டீபன், திட்டக்குடியைச் சேர்ந்த ராமு விக்னேஷ், மற்றும் மனோஜ் ஆனந்த் ஆகிய 4 பேரும் ரஷ்யாவில் உள்ள வோல்காகிராட் அரசு மருத்துவப் பல் கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பு இறுதியாண்டு படித்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த ஞாயிறன்று மாணவர்கள் நால்வரும் வோல்கா நதிக்கரையில் அமர்ந்திருந்தனர். மாணவர்களில் ஒருவர் நதியில் இறங்கியபோது எதிர் பாராத விதமாக சுழலில் சிக்கி உயிருக்குப் போராடியிருக் கிறார். அவரைக் காப்பாற்றும் நோக்கத்தில் ஆசிக் உள் ளிட்ட மூன்று பேரும் அடுத்தடுத்து நதியில் இறங்கியுள் ளனர். ஆனால் நான்கு பேரும் எதிர்பாராத விதமாக நதியில் சிக்கி உயிரிழந்து விட்டனர். இந்நிலையில், முஹம்மது ஆசிக்கின் தந்தை முகமது ரபீக் மற்றும் உறவினர்கள் திங்களன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து, ரஷ்யா வில் நதியில் சிக்கி உயிரிழந்த மாணவர்களின் உடல்களை அரசின் உதவியுடன் தாயகம் கொண்டு வர ஏற்பாடு செய்து தரும்படி மனு அளித்தனர்.