tamilnadu

நிவாரண உதவி வழங்கக் கோரி மண்ணிசை கலைஞர்கள் மனு

திருப்பூர், ஜூன் 8 - திருப்பூரில் நிவாரண உதவி கோரி மண்ணிசை கலை ஞர்கள் இசைக் கருவிகளோடு மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் மனு அளித்தனர். கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் கடந்த 2 மாதத்திற்கும் மேலாக ஊரடங்கு அமலில் உள்ள சூழ்நிலையில் தங்களால் எந்த நிகழ்ச்சிக் கும் செல்ல முடியாததால் வாழ்வாதாரம் இன்றி தவிப் பதாகவும், அரசு தங்களுக்கும் நிவாரண உதவிகள் வழங்க வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் மாவட் டத்தில் உள்ள இசைக் கலைஞர்கள் பறை இசைக் கருவி களோடு திங்களன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

;