tamilnadu

சட்டவிரோதமாக மது விற்றவர் கைது

 அவிநாசி, ஜூன் 18- அவிநாசி அடுத்த சேவூரில் சட்டவிரோதமாக மது விற்றவர் செவ்வாயன்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவிநாசி ஒன்றியம், சேயூர் ஊராட்சிக்குட்பட்ட பவர் ஹவுஸ் பகுதியில் ராஜா என்பவர் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வருவதாக மதுவிலக்கு காவல்துறையி னருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ராஜா வீட்டில் 76 மதுபாட் டில்கள் இருந்தது. இதையடுத்து ஹேமா தலைமையிலான அவிநாசி மதுவிலக்கு காவல்துறையினர் ராஜாவி டமிருந்து கர்நாடக மாநில மது பாட்டில்கள் மற்றும் இரண்டு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். பறி முதல் செய்யப்பட்ட மது பாட்டில்களை அவிநாசி மதுவிலக்கு காவல் துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

;