மடத்துக்குளம், மார்ச் 12- மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றி யத்தில் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருப்பூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் மடத் துக்குளம் ஊராட்சி ஒன்றியம், ஜோத் தம்பட்டி ஊராட்சி எஸ்.ஆர்.பட்டிணம் பகுதியில் தமிழ்நாடு முதலமைச்சரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய ரூ.2.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பசுமை வீட்டினையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ஜோத்தம்பட்டி ஊராட்சி வஞ்சிபுரம் பகுதியில் ரூ.2.28 லட்சம் மதிப்பீட்டில் விவசாய நிலத்தில் அமைந்துள்ள தென்னை மரங்களை சுற்றி குழியெடுத்தல் மற்றும் வரப்பு அமைக்கும் பணியினையும், மெட் ராத்தி ஊராட்சியில் விவசாய பயன் பாட்டிற்காக அமைக்கப்பட்டுள்ள தனிநபர் கிணறுகளையும், தடுப் பணை, சாலை மேம்பாட்டு பணிக ளையும் என சுமார் ரூ.85.07 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்தி கேயன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜ், செயற்பொறியாளர் சேகர், மடத்துக்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மணிகண் டன், சாதிக்பாட்ஷா, உதவி செயற் பொறியாளர் ஜெயந்தி, உதவி பொறி யாளர்கள் கார்த்திக்குமார், கார்த்திக் ராஜா, மடத்துக்குளம் வட்டாட்சியர் கனிமொழி உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.