tamilnadu

மாவட்ட அளவிலான கபாடி போட்டியில் கருவலூர் பள்ளி முதலிடம்

அவிநாசி, ஜன. 26- அவிநாசி அருகே கருவ லூர் அரசு பள்ளி மாணவர் கள் கபாடி மற்றும் வாலி பால் போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித் துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை சார் பில் இடுவம்பாளையம் அரசு பள்ளியில் கபாடி மற்றும் வாலிபால் போட்டி கள் நடத்தப்பட்டன. இப் போட்டிகளில் பல்வேறு பகுதியில் இருந்து அரசு பள்ளி மாணவர்கள் கலந்து  கொண்டனர். ஆண்கள் பிரிவு கபாடிப் போட்டியில் கருவலூர் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் முதலி டம் பிடித்தனர். அதேபோல் பெண்களுக்கான வாலி பால் போட்டியில் கருவலூர் பள்ளி மாணவிகள் முத லிடம் பெற்றனர். வெற்றி  பெற்ற மாணவ, மாணவி களுக்கு பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் வெற்றி சான்றிதழ்களும், கோப் பைகளும் வழங்கப்பட்டன.

;