அவிநாசி, செப்.30- மத்தியில் மோடி தலைமையி லான பாஜக அரசு வெற்று பர பரப்பை ஏற்படுத்தும் அரசாக செயல்படுகிறது என்று மார்க் சிஸ்ட் கட்சியின் மாநில செயற் குழு உறுப்பினர் கே.கனகராஜ் கூறினார். அவிநாசி ஒன்றியம் மற்றும் திருப்பூர்-ஊத்துக்குளி பகுதிகளில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு நிகழ்ச்சி ஞாயிறன்று நடைபெற்றது. இக் கூட்டத்தில் பங்கேற்ற மாநில செயற்குழு உறுப்பினர் கே.கன கராஜ் பேசுகையில் கூறியதாவது, மத்திய அரசு ஜனநாயகத்திற்கும், கூட்டாட்சி தத்துவத்திற்கு விரோ தமாக செயல்படுகின்றது. காஷ் மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய் யப்பட்டுள்ளது, இந்திய வரலாற் றில் ஜனநாயகத்திற்கு, கூட் டாட்சி தத்துவத்திற்கும் எதிரா னது. நம் அரசியல் சட்டம் இந் தியா மாநிலங்களின் ஒன்றியம் என்று சொல்கிறது. ஒரு மாநிலத் தின் எல்லையை மாற்றியமைக் கவோ, பரப்பளவை மாற்றிய மைக்கவோ ஒரு மாநிலத்தை பிரிக்கவே ஒரு மாநிலத்துடன் சேர்க்கவும், மாநிலத்தின் பெயரை மாற்றுவதற்கு மத்திய அரசாங் கம் குடியரசுத் தலைவர் மூலமாக பாராளுமன்றத்தில் மசோதா வைத் தாக்கல் செய்யலாம். ஆனால் இந்த மசோதா அதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட மாநி லங்கள் உடைய சட்டமன்றத் தில் கருத்துகளை கேட்க வேண் டும். ஆந்திரா மாநிலத்தை பிரிக் கும்போது கருத்து கேட்கப்பட் டுள்ளது. காஷ்மீர் விவகாரத்தில் மாநில சட்டமன்றத்தில் கருத்து கேட்காமலேயே நாடாளுமன் றத்தில் நிறைவேற்றப்பட்டது. வெளிநாட்டுப் பயணத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் எந்தவிதமான வர்த்தக ரீதியான ஒப்பந்தம் நடைபெறவில்லை. பரபரப்பை ஏற்படுத்தும் அர சாங்கமாக மத்திய பாஜக அரசு செயல்படுகிறது என்று மாநில செயற்குழு உறுப்பினர் க.கனக ராஜ் கூறினார். இதைத் தொடர்ந்து மாநிலக் குழு உறுப்பினர் கே.காமராஜ் பேசுகையில், திருப்பூர் மாவட் டத்தில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு இலக்கை நிறைவேற்ற தீவிர மாக நடைபெறுகிறது. விஜயபுரி கார்டன் பகுதியில் கடந்த ஆண்டு 7 சந்தாவாக இருந்தது,தற்போது 45 சந்தாக்கள் பெறப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகளின் விமர் சிக்கக் கூடிய பத்திரிக்கையாக தீக்கதிர் செயல்படுகின்றது என் பதை மக்கள் மத்தியில் தெரி யப்படுத்த வேண்டும். சந்தா சேர்க்க சென்றபோது ஒரு தோழர் கூறுகையில் புதிய கல்விக் கொள்கை சம்பந்தமாக வேறு எந்த பத்திரிக்கையிலும் வரவில்லை தீக்கதிர் பத்திரிக் கையில் மட்டும் தான் வந்தது. அதைப் படித்த பின்பு தான் புதிய கல்விக் கொள்கையை, இத்தனை பிரச்சனைகள் உள்ளது என்பதை தெரிந்துகொண்டேன் எனக் கூறினார் என்றார்.