tamilnadu

இஎஸ்ஐ திட்டத்தில் சேர திருப்பூர் தொழிலாளர்களுக்கு அழைப்பு

திருப்பூர், ஜூன் 22 - திருப்பூரில் பின்னலாடை உள்பட பல் வேறு தொழில்களில் பணியாற்றும் தொழி லாளர்கள் இஎஸ்ஐ திட்டத்தில் சேர்ந்து அவர்களும், அவர்களது குடும்ப உறுப்பி னர்களும் சமூகப் பாதுகாப்பு பெறுமாறு இஎஸ்ஐ நிறுவனம் அழைத்துள்ளது. இது தொடர்பாக திருப்பூர் இஎஸ்ஐ கிளை அலுவலக மேலாளர் தீக்கதிர் செய்தி யாளரிடம் கூறியதாவது: தொழிலாளர் அரசுக் காப்பீட்டு (இஎஸ்ஐ) திட்டம் தொழி லாளர்களுக்கு மிகவும் பலனளிக்கும் திட்ட மாகும். 10 தொழிலாளர்களுக்கு மேற்பட்ட வர்கள் பணியாற்றும் தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களில் இஎஸ்ஐ திட்டம் அமலாக்கப்படுகிறது. இதன் மூலம் தொழிலாளர் நோய்க் காலம், பேறு காலம், வேலையின் காரணமாக காயமுற்று ஊனம்,  மரணமடைதல், மருத்துவ செலவு, ஈமச் சடங்கு உள்ளிட்ட பணப்பயன்கள் பெற முடியும். மாத ஊதியம் ரூ.21 ஆயிரம் வரை  ஈட்டக்கூடிய தொழிலாளர்கள் இத் திட்டத்தில் சேரலாம். குறிப்பாக சாலைப் போக்குவரத்து, உணவகங்கள், உணவு விடுதிகள், திரை யரங்குகள், செய்தி நிறுவனங்கள், கடைகள்,  தனியார் கல்விக் கூடங்கள், மருத்துவ நிறு வனங்கள் உள்ளிட்டவற்றில் வேலை செய்யும் தொழிலாளர், பணியாளர் இதில் காப்பீட்டுதாரராக சேரலாம். தொழிலாளர் ஊதியத்தில் தொழிலாளர்கள் 1.75 சத விகிதம், நிறுவன உரிமையாளர்கள் 4.25 சதவிகிதம் செலுத்திட வேண்டும்.
மருத்துவப் பயன்
இஎஸ்ஐயில் காப்பீடு செய்யப்பட்டு விட்டால் அந்த முதல் நாளில் இருந்தே  தொழிலாளியும், அவரைச் சார்ந்தவர்களும் மருத்துவ வசதி பெறலாம். வெளி நோயாளி யாக சிகிச்சை பெறுவதில் இருந்து உயர் தர சிகிச்சை வரை பெற முடியும். அத்துடன்  வருடம் ஒன்றிற்கு ரூ.120 செலுத்திவிட்டால் இஎஸ்ஐ மருந்தகம் மற்றும் இஎஸ்ஐ மருத்து வமனையில் முதியோர் மருத்துவ சேவை,  ஓய்வு பெற்றோர், விருப்ப ஓய்வு பெற் றோர், ஊனமுற்றோர் அவர்களின் துணை வர்கள் மருத்துவ பயன்களைப் பெறலாம். பணப்பயன் இஎஸ்ஐ கிளை அலுவலகங்கள் மூலம் ஊதிய இழப்பு, ஊதியத் திறன் இழப்பு, நோய், மகப்பேறு, வேலை நிமித்தமாக ஏற் பட்ட காயம், ஊனம் அல்லது இறப்பு போன்றவைகளுக்குப் பணப் பயன் பெறலாம். நோய்க் கால உதவித் தொகை, ஊன உதவித் தொகை, மகப்பேறு உதவித் தொகை அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர், மருத்துவக் குழு சான்றளித்த பின் கொடுக் கப்படும்.
மருத்துவக் கல்வி
இத்துடன் இஎஸ்ஐ மருத்துவக் கல் லூரியில் காப்பீடு பெற்ற தொழிலாளர் களின் குழந்தைகளுக்கு எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புக்கான இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. எனினும் அவர்கள் நீட் தேர்வில் தகுதி பெற்றிருக்க வேண்டும். இவ்வாறு இஎஸ்ஐ கிளை மேலாளர் தெரிவித்தார். திருப்பூரைப் பொறுத்தவரை இரு கிளை அலுவலகங்களில் ஏறத்தாழ 2 லட்சம் தொழி லாளர்கள் காப்பீடுதாரர்களாக இருக் கின்றனர். ஆனால் பல்வேறு தொழில் களையும் கணக்கில் கொண்டால் இங்கு பல லட்சம் தொழிலாளர்கள் வேலை செய் கின்றனர். அவர்களும் இஎஸ்ஐ பயன் களைப் பெற முடியும். ஆனால் பல தொழிற் சாலைகளின் நிர்வாகிகள், உரிமை யாளர்கள் அனைத்துத் தொழிலாளர் களையும் இஎஸ்ஐ சந்தாதாரர்களாகச் சேர்ப்பதில்லை. தொழிலாளர்கள் விரும்பு வதில்லை என்ற காரணத்தைச் சொல்லி இஎஸ்ஐ சந்தாதாரர்களாகச் சேர்க்க மறுக் கின்றனர். இந்த விசயத்தில் தொழி லாளர்கள் விழிப்புணர்வு பெற்று இஎஸ்ஐ  சந்தாதாரர்களாக மாறுவதன் மூலம் மருத்துவ, பணப் பயன்களைப் பெறுவ துடன் தங்களுக்கும், தங்கள் குடும்பத் தாருக்கும் சமூகப் பாதுகாப்புப் பெற முடியும். எனவே இஎஸ்ஐ திட்டத்தில் சேர  தொழிலாளர்கள் முன்வர வேண்டும் என்றும் அவர் கூறினார்.