திருப்பூர், மார்ச் 19- திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்தில் புகுந்த நபர் ஒருவர் வன்முறை வெறியாட் டத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர்- பல்லடம் சாலை எல்ஆர்ஜி கல்லூரி அருகே மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகம் அமைந்துள்ளது. இங்கு வியாழனன்று காலை 9.15 மணிக்கு இங்கு ஒரு நபர் நுழைந்தார். திடீரென ஆட்சியர் அலுவலக நுழைவாயில் வர வேற்பறையின் கண்ணாடியை அந்த நபர் தனது கையில் வைத்திருந்த இரு சக்கர வாகன சங்கிலியால் அடித்து நொறுக் கினார். அத்துடன் முன் பகுதியில் நிறுத்தி யிருந்த அரசு வாகனத்தின் மீதும் இரும்பு சங்கிலியால் தாக்கினார். இதில் அந்த வாகனத்தின் முன்பக்க மற்றும் பக்க வாட்டுக் கண்ணாடி உடைந்து நொறுங்கி யது. இந்த வாகனம் புள்ளியியல் துறை உதவி இயக்குநருக்கு உரியதாகும். இவரது செயலைப் பார்த்து ஆட்சியரக நுழைவாயில் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மாநகர ஆயுதப் படையைச் சேர்ந்த பெண் காவலர் சாந்தி (25) அவரைத் தடுத்து நிறுத்த முயன்றார். அப்போது அந்த நபர் பெண் காவலரையும் இரும்பு சங்கிலியால் தாக்கினார். அவரின் அலறல் சத்தம் கேட்கவே, அலுவலகத்திற்கு வந்திருந்த அரசு ஊழியர்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் நுழைவாயில் பகுதியில் திரண்டனர். அப்போது தாக்குதல் நடத்திக் கொண்டிருந்த நபர் திடீரென ஆட்சியரக நுழைவாயிலின் பிரதான பெரிய கதவை அடைத்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் நடந்து கொண்டிருந்த நிலையில் வீரபாண்டி காவல் நிலையத் தார் அங்கு திரண்டனர். ஆட்சியர் அலுவல கத்தின் பின்பக்க கதவு வழியாக உள்ளே புகுந்த அலுவலக ஊழியர்கள் மற்றும் போலீ சார், உள்ளே நுழைந்த நபரின் கவனத்தை திசை திருப்பி மடக்கிப் பிடித்தனர். அவரை சரமாரியாக உதைத்து காவலர்களிடம் ஒப்ப டைத்தனர். இதனைத் தொடர்ந்து வீரபாண்டி காவல் நிலையத்துக்கு அந்த நபரை காவ லர்கள் கொண்டு சென்று விசாரணை மேற் கொண்டனர். இந்த சம்பவம் பற்றி ஆட்சியரகத்தில் இருந்த ஊழியர்கள் கூறியதாவது: காலை நேரம் என்பதால் அப்போதுதான் ஊழியர் கள் பலரும் அலுவலகத்துக்கு வந்து கொண் டிருந்தோம். அப்போது ஒரு நபர் அங்கி ருந்த அலுவலகஅறை, வாகனம் மற்றும் பெண் காவலரை வெறித்தனமாக தாக்கிக் கொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தோம். அந்த நபர் கையில் கத்தி மற்றும் இருசக்கர வாகன செயினையும் வைத்துக் கொண்டு, மிக ஆவேசமாக ஆட்சி யர் அலுவலக அறைக்கும் சென்றுவிட்டு திரும்பினார். அத்துடன் ஆட்சியரின் நேர் முக உதவியாளர் அறைக்கு அருகிலும் அவர் சென்று திரும்பினார். கையில் ஆயுதத்துடன் ஆவேசமாக இருந்ததால் யாரும் அருகில் செல்ல முடியவில்லை. சிலர் அவரது கவனத்தை திசை திருப்பித்தான் மடக்கிப் பிடித்தனர் என்று தெரிவித்தனர். இது தொடர்பாக வீரபாண்டி காவலர் கள் கூறுகையில், ஆட்சியரகத்தில் தாக்குத லில் ஈடுபட்டவர் திருப்பூர், பெருமாநல்லூர் அருகே கருணாம்பதியைச் சேர்ந்த கலிய பெருமாள் என்பவரின் மகன் இளங்கோ (40). இவர் 3ஆம் வகுப்பு வரை படித் துள்ளார். எலக்ட்ரான் மூலக்கூறுகள் கண்டு பிடித்துள்ளதாகவும், என்றும் மனிதன் இளமையாக இருக்க மூலக்கூறு தன்னிடம் இருப்பதாகவும், இந்த மூலக்கூறு தொடர் பான அறிவைத் திருட சிலர் முயற்சிப்பதாக வும் தெரிவித்தார். வீட்டை விட்டு 4 ஆண்டு களுக்கு முன்பு வெளியே வந்துவிட்ட தாகவும், இந்த அறிவியல் கண்டுபிடிப்பை குடியரசுத் தலைவர், இந்திய விமானப்படை தலைவருக்கும் அனுப்பி வைத்துள்ளேன். இதனை யாரும் மதிக்காததால், தற்போது நியாயம் கேட்டு இப்படி நடந்து கொண் டதாக அவர் கூறியதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.