திருப்பூர், மே 26 - தேசிய கால்நடை இயக்கத் திட்டத் தின் கீழ் 2019-20ஆம் ஆண்டில் திருப்பூர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறை மூலம் 3800 கால்நடைகளுக்கு மானி யத்துடன் காப்பீடு மேற்கொள்ள இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இத்திட் டத்தில் காப்பீடு மேற்கொள்ள வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள கால்நடை வளர்ப்போ ருக்கு 70 விழுக்காடு மானியமும், வறுமைக் கோட்டிற்கு மேலுள்ள கால்நடை வளர்ப் போருக்கு 50 விழுக்காடு மானியமும் வழங் கப்படும். இரண்டரை முதல் 8 வயதுள்ள கறவை மாடுகள், எருமைகள் மற்றும் 1 முதல் 3 வயதுள்ள வெள்ளாடுகள், செம்மறியா டுகளுக்கு இத்திட்டத்தில் காப்பீடு செய்யப் படும். இத்திட்டத்தில் அதிகபட்சமாக 35 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கால்நடை களுக்கு காப்பீடு செய்ய மானியம் வழங்க ப்படும். ஓராண்டு காப்பீட்டுக் கட்டணமாக கால்நடையின் மதிப்பில் 2 விழுக்காடும் மூன்றாண்டு காப்பீட்டுக் கட்டணமாக அதிகபட்சம் கால்நடையின் மதிப்பில் 5 விழுக்காடும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு குடும்பத்திற்கு 5 கால்நடைகளுக்கு இத்திட்டத்தில் காப்பீடுசெய்யலாம்.