tamilnadu

img

மோசமான சாலையை சீரமைக்கக்கோரி வாலிபர் சங்கத்தினர் நூதனப் போராட்டம்

திருப்பூர், ஆக. 21 - திருப்பூர் மாநகராட்சி 30 ஆவது வார் டில் உள்ள மோசமான சாலையை சீர மைக்கக்கோரி இந்நிய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நூதனப் போராட்டத்தில் ஈடு பட்டனர். திருப்பூர் மாநகராட்சி 30 ஆவது வார்டில் போயம்பாளையம் பிரிவு முதல் கங்கா நகர் செல்லும் சாலை பல ஆண்டுகளாக குண் டும், குழியுமாக உள்ளது.

இந்த சாலையை உடனடியாக சீரமைக்கக்கோரி வெள்ளி யன்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தினர் சாலைகளுக்கு குளுக்கோஸ் ஏற்றும் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு வாலிபர் சங்கக் கிளைச் செயலாளர் கேசவன் தலைமை வகித்தார். இதில், வாலிபர் சங்கத்தின் வடக்கு ஒன்றியச் செயலாளர் எஸ்.அருள், கிளைத் தலைவர் மகேந்திரன் மற்றும் ஒன் றியக்குழு நிர்வாகிகள் செல்வக்குமார், விக் னேஷ் மற்றும் சிபிஎம் செயலாளர் மகேஷ் வரன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 இப்போராட்டத்தின் தொடர்ச்சியாக கங்கா நகர் செல்லும் சாலையை உடன டியாக செப்பனிட நடவடிக்கை எடுப்ப தாக மாநகராட்சி அதிகாரிகள் உறுதி யளித்தனர்.

;