tamilnadu

img

சார்பதிவாளர் அலுவலகத்தில் காற்றில் பறக்கும் தனிமனித இடைவெளி

அவிநாசி, ஆக. 25- அவிநாசியில் பத்திரப் பதிவுத்துறை சார் பதிவாளர் அலுவலகத்தில் மக்கள் அதிகம் கூடுவதால் தனிமனித இடைவெளி காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது. அவிநாசி பேரூராட்சி, திருமுருகன்பூண்டி பேரூ ராட்சி, பெருமாநல்லூர், குன்னத்தூர், செங்கப்பள்ளி, சேவூர், தெக்கலூர், பழங்கரை உள்ளிட்ட 31 ஊராட்சி களுக்கும் அவிநாசி பத்திரப்பதிவுத்துறை அலுவலகத் தில் ஒரே கட்டிடத்தில் இருப்பதால், பத்திரப்பதிவுக்கு அதிக அளவில் மக்கள் இங்கு கூடுகின்றனர். நாளொன் றுக்கு இங்கு சராசரியாக 150 பத்திரப்பதிவு நடை பெறுவதாக கூறப்படுகிறது.

ஒரு பத்திரப்பதிவுக்கு குறைந்தபட்சம் 4 பேர் அனுமதிக்கப்பட்டாலும் 600-க்கும் மேற்பட்டவர்கள் இந்த அலுவலகங்களுக்கு வந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. கொரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் சூழலில், இந்த ஒரே கட்டிடத்தில் 600-க்கும் மேற்பட் டவர்கள் வந்து செல்வதால் தனிமனித இடை வெளியைப் பின்பற்றுவதில் கடும் சிக்கல் ஏற்பட்டுள் ளது. மேலும் இந்த கட்டிடத்துக்கு முன்பு பந்தல் உள்ளிட்ட  எவ்வித வசதியும் இல்லை.  இதனால் அருகில் உள்ள  கட்டிடங்களில் நிழலுக்கு மக்கள் ஒதுங்கி நிற்பதன் காரணமாக நெருக்கமாக நிற்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் தனிமனித இடைவெளியைக் கடை பிடிக்கும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் அரசு நிர்வாகம் ஈடுபட வேண்டுமென மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.  இந்நிலையில், இந்த அலுவலகக் கட்டிடத்தின் முன்பு பத்திரப்பதிவு டோக்கன் எண் அறிவிக்கப்பட்டதும் சம்பந்தப்பட்டவர்கள் மட்டும் அலுவலகத்துக்குள் வந்து செல்லும் வகையில், தற்போது அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.