tamilnadu

அவிநாசி பகுதியில் குடிநீரை காய்ச்சிக் குடிக்க அறிவுறுத்தல்

அவிநாசி, அக். 24 – அவிநாசி பகுதியில் விநியோகிக் கப்படும் குடிநீரை காய்ச்சிக் குடிக்க வேண்டும் என ஊராட்சி நிர்வாகத் தினர் மற்றும் சுகாதார துறையினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பருவ மழை காரணமாக பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட் டுள்ளது. இதனால், நீரேற்று நிலை யத்தில் மின் மோட்டார்களிலும், நீர் ஏற்றம் செய்யும் குடிநீர் குழாய்க ளிலும் மண் அடைப்பு ஏற்பட்டுள் ளது. இருப்பினும் தண்ணீர் சுத்தி கரிக்கப்பட்டு குடிநீராக விநியோகிக் கப்படுகிறது. ஆனால் குடிநீருடன் செம்மண் கலந்து வருவதால், பொது மக்களுக்கு சுகாதாரக் கேடு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, சுகாதாரத் தைப் பாதுகாக்கும் பொருட்டு, அவி நாசி, அன்னூர் மற்றும் சூலூர் ஒன்றிய கூட்டு குடிநீர் விநியோகிக்கப்படும் பகுதிகளான, சேவூர் ஊராட்சி, ஆலத் தூர், பொங்கலூர், தண்டுக்காரன் பாளையம், போத்தம்பாளையம், பாப்பாங்குளம், வடுகபாளையம், நடுவச்சேரி, புதுப்பாளையம், ராம நாதபுரம், வேலாயுதம்பாளையம், தெக்கலூர் , கருவலூர், பழங்கரை, உப்பிலிபாளையம் ஆகிய ஊராட்சி களில் விநியோகிக்கப்படும் குடிநீரை காய்ச்சிக் குடிக்க வேண்டும் என ஊராட்சி நிர்வாகம் மற்றும் சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.