திருப்பூர், மார்ச் 16 – தியாகி பன்னீர்செல்வம் நினைவு தினத்தை முன் னிட்டு சிஐடியு பனியன் தொழிலாளர் சங்கம், இந் திய ஜனநாயக வாலிபர் சங்கம் இணைந்து ஞாயி றன்று நடத்திய ரத்த தான முகாமில் 38 பேர் ரத்த தானம் செய்தனர். திருப்பூர் அங்கேரி பாளையத்தில் இந்த முகாம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ் பங்கேற்று இம்முகாமைத் தொடங்கி வைத்துப் பேசினார். இதில் சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.ரங்க ராஜ், பனியன் தொழிலாளர் சங்கத் தலை வர் சி.மூர்த்தி, பொதுச் செயலாளர் ஜி.சம் பத், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் செ.மணிகண்டன் மற்றும் வாலிபர் சங்க முன்னாள் மாவட்டத் தலைவர் ஆர்.காளி யப்பன் உள்ளிட்டோர் இதில் வாழ்த்திப் பேசினர். மார்ச் 17ஆம் தேதி தியாகி பன்னீர் செல்வம் நினைவு தினம் கடைப்பிடிக் கப்படுகிறது. அவரது நினைவு நாளை முன்னிட்டு கடந்த பல ஆண்டுகளாக சிஐடியு பனியன் தொழிலாளர் சங்கம், வாலிபர் சங்கம் இணைந்து ரத்த தான முகாமை நடத்தி வருகின்றனர். இந்த ஆண்டு 38 பேர் அரசு மருத்துவமனைக்கு ரத்த தானம் வழங்கினர்.
இன்று நினைவு தின பொதுக்கூட்டம்
தியாகி ஆர்.பன்னீர்செல்வம் 22ஆவது ஆண்டு நினைவு தினம் திருப்பூர் கேத்தம் பாளையத்தில் செவ்வாய்கிழமை கடைப் பிடிக்கப்படுகிறது. மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் பங்கேற்று சிறப்புரை ஆற்று கிறார்.