tamilnadu

மலேசியாவில் இருந்து திரும்பியவரை தேடும் சுகாதாரத் துறையினர்

அவிநாசி, மார்ச் 23- மலேசியாவில் இருந்து திருமுரு கன்பூண்டிக்கு வந்ததாகக் கூறப்ப டும் நபரை சுகாதாரத் துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்ற னர். கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக ஞாயிறன்று நடைபெற்ற சுய ஊரடங்கைத் தொடர்ந்து செவ்வாய் மாலை 6 மணி முதல் இம்மாதம் 31ஆம் தேதி வரை மாவட்ட எல்லைகள் மூடப்ப டுகின்றன.  இந்நிலையில், மலேசியாவில் இருந்து அவிநாசி அருகே உள்ள திருமுருகன்பூண்டிக்கு வந்ததாகக் கூறப்படும் நபரை சுகாதாரத் துறை யினர் தேடி வருகின்றனர். இது குறித்து சுகாதாரத் துறையினர் கூறி யதாவது, சனியன்று மலேசியாவில் இருந்து சென்னை விமான நிலை யத்திற்கு வேதாரெட்டி என்பவர் வந்துள்ளார். அவர் திருமுருகன் ன்பூண்டி பகுதியில் உள்ளதாகவும், அவரை கண்டுபிடிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அவரைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளோம். அவரது முகவரி இல்லாமல், பெயர் மட்டும் குறிப்பிட்டுள்ளதால், அவரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். அதிலும் வேதாரெட் டிக்கு எவ்வித பாதிப்புமில்லை எனக் கூறப்படுகிறது. இருப்பினும் முன் னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரைத் தனிமைப் படுத்தி வைப்ப தற்காக தேடும் பணி மேற்கொண் டுள்ளோம். மேலும் வருவாய்த் துறை மற்றும் காவல் துறையினரும் தேடுதல் முயற்சியில் ஈடுபட்டுள்ள தாக சுகாதாரத்துறையினர் தெரி வித்தனர்.