திருப்பூர், அக். 12 - இடுவாய் ஊராட்சியில் கோவை எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டு புனரமைக்கப்பட்ட மகளிர் சுகாதார வளாகத்தையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாரதிபுரம் கிளை அலுவலகத்தையும் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் திறந்து வைத்தார். திருப்பூர் ஒன்றியம், இடுவாய் ஊராட்சி வாசுகி நகர் பகுதியில் கோவை நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் 2011 - 2012 ஆம் ஆண்டு மேம்பாட்டு நிதியில் மகளிர் மற்றும் குழந்தைகள் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. அந்த வளா கத்தில் பழுதடைந்த பகுதிகளை தற் போது 2019-2020 ஆம் ஆண்டு ஊராட்சி பொதுநிதியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்து புனரமைப்பு செய்யப் பட்டது. இந்த சுகாதார வளாகத்தை யும் பி.ஆர்.நடராஜன் எம்.பி., ஞாயி றன்று மாலை திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சிக்கு இடுவாய் ஊராட்சி மன்றத் தலைவர் க.கணேசன் தலைமை ஏற்றார். இந்த வளாகத்துக்கு அருகில் மரக்கன்றுகளும் நடப்பட் டது. இந்நிகழ்ச்சியில் இடுவாய் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் எஸ்.பரமசிவம், ஊராட்சி மன்ற உறுப் பினர்கள் எஸ்.சர்மிளா, பி.ஈஸ்வரி, கணேசன் மற்றும் ஊராட்சி பொது மக்களும் திரளாக பங்கேற்றனர். சிபிஎம் அலுவலகம் திறப்பு இதேபோல், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பாரதிபுரம் கிளை அலுவலகத்தையும் கோவை நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் திறந்து வைத்தார்.
அப்போது, பாரதி புரம் பகுதி வாழ் பொதுமக்கள் பட்டா பிரச்சனையை தீர்த்து வைக்குமாறு பி.ஆர்.நடராஜன் எம்.பி.,யிடம் மனு அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் மார்க் சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பி னர் கே. காமராஜ், மாவட்டச் செயலா ளர் எஸ்.முத்துக்கண்ணன், திருப்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் சி.மூர்த்தி, இடுவாய் ஊராட்சி மன்றத் தலைவர் க.கணேசன், சீராணம்பாளையம் கிளைச் செயலாளர் க.ஈஸ்வரன், இடு வாய் கிளை செயலாளர் க.கருப்புசாமி, பாரதிபுரம் கிளை செயலாளர் கே. குமரவேல் உள்ளிட்டோர் பங்கேற்ற னர்.