திருப்பூர், பிப். 13 – திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த டிசம்பர் 24ஆம் தேதி பிறந்த ஆண் குழந்தையை அவரது தாயார் கைவிட்டுவிட்டுச் சென்றுவிட்டார். இந்த ஆண் குழந்தை பொள்ளாச்சி சரணாலயம் தத்து வழங்கும் நிறுவனத்திடம் தற்காலிகப் பாதுகாப்பு மற்றும் பராமரிப் புக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 24ஆம் தேதி ஜெயலலிதா என்ற பெண் பிரசவத்திற்காக மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அன் றைய தினமே ஆண் குழந்தை பிறந்தது. மூன்று நாட்கள் கழித்து 27ஆம் தேதி அந்த தாய் ஜெயலலிதா தனது ஆண் குழந்தையை கைவிட்டுவிட்டு மருத்துவமனையில் இருந்து யாருக்கும் தெரியாமல் வெளியேறிவிட்டார். இந்நிலையில் குழந்தை உடல்நலக் குறைவாக இருந்த தால் மருத்துவமனையிலேயே வைத்துப் பராமரித்தனர். சிகிச்சைக்குப் பின் ஆரோக்கியமான நிலையில் கடந்த ஜனவரி 7ஆம் தேதி, குழந்தைகள் நலக்குழுவில் முன்னி லைப்படுத்தி, கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி சரணாலயம் தத்து வழங்கும் நிறுவனத்திடம் தற்காலிக பாதுகாப்பு மற்றும் பராமரிப்புக்காக குழந்தை ஒப்படைக் கப்பட்டது. தற்போது 41 நாட்கள் வயதான அந்த குழந்தை பற்றி யாருக்கேனும் தகவல் தெரிந்தால் திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அல்லது குழந்தைகள் நலக்குழு தலைவர் அல்லது பொள்ளாச்சி சிங்கரம்பாளையம் பிரிவில் உள்ள சரணாலயம் தத்து வள மையத்தை நேரில் அணுகலாம். 30 நாட்களுக்குள் யாரும் தொடர்பு கொள்ளாதபட்சத்தில் இக்குழந்தை சட்டப்படி தத்துக் கொடுக்கப்படும் என்று திருப்பூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.