உடுமலை, டிச. 24- அமராவதி நகர் சைனிக் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வழியனுப்பு விழா அணிவகுப்பு செவ்வா யன்று நடைபெற்றது. உடுமலை அருகே அமராவதி நக ரில் அமைந்துள்ள சைனிக் பள்ளி யில் பனிரெண்டாம் வகுப்பு படித்து முடித்து வெளியேறும் மாணவர்க ளுக்கு ஆண்டுதோறும் வழியனுப்பு விழா நடைபெறும். இந்த ஆண்டு பள்ளிப் படிப்பை நிறைவு செய்யும் 85 மாண வர்கள் கலந்து கொண்ட அணிவகுப்பு செவ்வாயன்று நடைபெற்றது. இதில் கோவை கப்பல் படை தலைமை நிலைய அதிகாரி கமோடர் அசோக் ராஜ் கலந்து கொண்டு அணிவகுப்பு, இசை நிகழ்ச்சி மற்றும் கலை நிகழ்ச்சிகளைப் பார்வை யிட்டார். சூலூர் விமானப்படை நிலைய தலைமை அதிகாரி எஸ்.ஜெ.பென்ஸ், வெலிங்கட்ன ராணுவ கல்லூரி குரூப் கேப்டன் சன்கர், கோவை விமானப் படை கல்லூரி குரூப் கேப்டன் எஸ். முரளி உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பா ளர்களாகக் கலந்து கொண்டனர். பள்ளி முதல்வர் எச்.எஸ்.சிதானா, நிர்வாக அதி காரி அமித் குர்குரே, துணை முதல்வர் நிர் பேந்தர் சிங் உள்ளிட்டோர் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.