tamilnadu

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி வகுப்பு

திருப்பூர், ஆக. 1 – திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற்று வரும் தன்னார்பயிலும் வட் டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணை யத்தால் போட்டித்தேர்வு களுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப் பட்டு வருகிறது. இக் கொரோனா காலத்தில் மாணவர்கள் வீட்டிலிருந்த படியே தேர்விற்குத் தயா ராகி வரும் நிலையில்,  கிராமப்புற மாணவர்களும் போட்டித் தேர்வினை எளி தில் எதிர்கொள்ளும் வகை யில் இணையதள வாயி லாக இலவசப் பயிற்சி வகுப்பு மே 15 முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

திருப்பூரில் போட்டித் தேர்வுக்கு தயாராகும் இளை ஞர்கள் அனைவரும் இணை யதளத்தில் நடத்தப்படும் போட்டித்தேர்வுக்கான காணொளி கற்றல் வகுப் பில் கலந்து கொள்ள அதற் கான tiruppurstudycircle@gmail.com என்ற மின்னஞ்ச லில் விருப்பம் தெரிவிக்க லாம்.இதன் மூலம் இலவச பாடக்குறிப்புகள், பாடத் திட்டங்கள், பாடநூல்கள், வினாத்தாள்கள் மற்றும் தங்களுடைய கற்றல் திறன் பரிசோதனை செய்வ தற்கு மாதிரித்தேர்வுகள் இடம் பெற்றுள்ளன. எனவே போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் இவ்விணையதளத்தில் பதிவு செய்து பயன்பெற லாம். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்தி கேயன் தெரிவித்துள்ளார்.

;