திருப்பூர், பிப். 12- முழு சுகாதாரம் குறித்த கிராம சுகாதார ஊக்கு விப்பாளர்களுக்கான அலைபேசி செயலி பயிற்சி திருப்பூரில் புதனன்று நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வாராந்திர மக்கள் குறைதீர்ப்புக் கூட்டரங்கில் கிராம சுகாதார ஊக்குவிப்பாளர்களுக்கான அலை பேசி செயலி பயிற்சி முகாம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 265 ஊராட்சி களில் 265 கிராம சுகாதார ஊக்குவிப்பாளர்களுக்கு, அலைபேசி செயலி பயிற்சி அளிக்கப்பட்டது. இம்மு காமிற்கு, திருப்பூர் மாவட்ட வீட்டுவசதி மற்றும் சுகாதாரத் துறை உதவி இயக்குநர் எம்.மணிகண் டன் தலைமை வகித்தார். மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் கே.கந்தசாமி, மாவட்ட பயிற்று நர்கள் சி.சங்கீதா, எம்.சுதா, அங்கயற்கண்ணி, ராதிகா மற்றும் சித்ராதேவி ஆகியோர் பயிற்சி அளித்தனர். இதில், கிராமப்புற வீடுகளின் தூய்மை, திடக்க ழிவு மேலாண்மை, தனிநபர் இல்ல கழிப்பிடம், பள்ளிகளில் சுகாதாரம், வீட்டுத்தோட்டம், கிராம சுகாதார செவிலியர்களின் செயல்பாடு தொடர் பான கள விவரங்கள், முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் மற்றும் பெண் குழந்தைகள் பாது காப்பு, மழைநீர் சேகரிப்பு உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய தூய்மை தமிழகம் அலைபேசி செயலியை கிராம சுகாதார ஊக்குவிப்பாளர்கள் நேரடியாக பயன்படுத்தி மத்திய அரசின் குடிநீர் மற்றும் சுகாதாரத்துறை நேரடியாக அறிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை அலைபேசியில் எப்படி பயன்படுத் துவது என்பது தொடர்பாக கிராம சுகாதார ஊக்கு விப்பாளர்கள் பயிற்சி பெற்றனர்.