tamilnadu

img

அத்திக்கடவு - அவிநாசி திட்டத்திற்கு வெடிவைத்து பாறைகள் அகற்றம் குடியிருப்புகள் விரிசலடைந்ததால் பொதுமக்கள் ஆவேசம்

அவிநாசி, அக். 13- அவிநாசி - அத்திகடவு திட்டத்திற்கு குழி தோண்ட வந்த பொக்கலைன் இயந்தி ரத்தை அப்பகுதி பொதுமக்கள் சிறை பிடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் மாவட்டம், அவிநாசி பேரூராட் சியில் மடத்துப்பாளையத்தில் விநோபா காலனி உள்ளது. இங்கு 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந் நிலையில், அத்திக்கடவு - அவிநாசி நீர் செறி வூட்டும் திட்டப்பணிக்காக, இங்குள்ள பட் டத்தரசியம்மன் கோவில்  அருகே குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின் றது. இந்த நிலம் பாறை நிலமாக இருந்த தால், வெடிப்பொருட்களை வைத்து பாறை களை தகர்க்கும் பணிகளை மேற்கொண்ட னர். இதனால், அனைத்து வீடுகளிலும் அதிர்வு ஏற்பட்டு சுவர்களில் விரிசல் ஏற்பட் டது.

இதையடுத்து திட்டப் பணியாளர்களி டம் குடியிருப்பு வாசிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  இந்நிலையில், மீண்டும் குழிகளை தோண்டுவதற்காக ஜேசிபி பொக்கலின் இயந்திரத்தை கொண்டு வந்ததையறிந்த பொதுமக்கள் திரண்டு வந்து பொக்கலைன் இயந்திரத்தை  முற்றுகையிட்டு சிறைபிடித்த னர். இதனால்  அங்கு பரபரப்பு ஏற்பட் டது.  இதையடுத்து தகவலறிந்து வந்த அத் திக்கடவு - அவிநாசி திட்டப்பணி நிர்வாக செயற்பொறியாளர் அன்பழகன், உதவி செயற்பொறியாளர் அப்புசாமி, பொதுப் பணித்துறை அதிகாரி சந்தோஷ்குமார் ஆகி யோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், இனி குடியிருப்புகளின் அருகே வெடி வைத்து பாறைகளை அகற்றுவதில்லை என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனடிப்படையில் பொதுமக்கள் அனை வரும் கலந்து சென்றனர்.