tamilnadu

மாவட்ட ஆட்சியர் தலைமையில் அமைதிக்குழுவை ஏற்படுத்திடுக மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வலியுறுத்தல்

திருப்பூர், மார்ச் 4 – திருப்பூரில் அமைதி நிலவவும், சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாக் கவும் மாவட்ட ஆட்சியர் தலைமை யில் அமைதிக்குழுவை ஏற்படுத்த வேண்டும் என மதச்சார்பற்ற முற் போக்குக் கூட்டணிக் கட்சிகள் வலியுறுத்தி உள்ளன. திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் திமுக மாந கரச் செயலாளர் டி.கே.டி. மு.நாக ராஜ் தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிக ளின் நிர்வாகிகள் கூட்டம் புதன ன்று நடைபெற்றது. இக்கூட்டத் தில் காங்கிரஸ் மாவட்டத் துணைத் தலைவர் பி.கோபால்சாமி, மார்க் சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செய லாளர் செ.முத்துக்கண்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.ரவி, மதிமுக மாநகர் மாவட்டச் செயலா ளர் சு.சிவபாலன், கொமதேக மாவட்டச் செயலாளர் ரோபோ ரவி, முஸ்லிம் லீக் துணைத் தலை வர் பாபுஜி ஆகியோர் பங்கேற்ற னர். இக்கூட்டத்தில், திருப்பூரில் அமைதி நிலவவும், சமூக நல்லி ணக்கத்தைப் பாதுகாக்கவும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் அமைதிக்குழுவை ஏற்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடப்பட்டுள்ளது. மத்திய அரசு அரசமைப்புச் சட்டத்துக்கு முர ணாக நிறைவேற்றி உள்ள குடியு ரிமைத் திருத்தச் சட்டம், என்பி ஆர், என்ஆர்சி ஆகிய நடவடிக்கை களை ஆட்சேபித்து ஆங்காங்கே அறப்போராட்டங்கள் நடந்து வரு கின்றன. அதேசமயம் சில நாட்க ளாக ஆங்காங்கே குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவு என்ற பெயரில் வன்முறையைத் தூண்டும் போராட்டங்கள் வேண் டுமென்றே நடத்தப்படுகின்றன. தலைநகர் தில்லியில் கலவரம் ஏற்பட்டு பல உயிர்கள் பலியாகி, உடமைகள் நாசமாகியுள்ளன. நாட்டில் கொந்தளிப்பான நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தொழில் நகர மான திருப்பூரில் ஒரு பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது. எந்நேரத்தி லும் கலவரம் எதாவது ஏற்பட்டு விடுமோ என்ற நிலையில் அனைத்து தரப்பு மக்களும் அச்சத் துடன் உள்ளனர். ஏதாவது அசம் பாவிதம் ஏற்பட்டால் ஆயத்த ஆடை ஏற்றுமதி தொழில் நகர மான திருப்பூர் மிகப்பெரும் பாதிப்புக்கு உள்ளாகிவிடும் என்ற அச்சம் மேலோங்கியுள்ளது. எனவே வரும்முன் காக்கும் வகையில் தீய சக்திகளைத் தனி மைப்படுத்தி அவர்களின் சதித் திட்டங்களை முறியடிக்கும் வகை யில் மக்களிடையே நம்பிக்கை ஏற்படுத்தும் விதத்திலும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் உரிய நடவ டிக்கையை மேற்கொள்ள வேண் டும். அனைத்துக் கட்சிகள், தொழில் வர்த்தக அமைப்புகளின் பிரதிநிதிகள் கொண்ட கூட் டத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும், ஆட்சியர் தலைமை யில் நாடாளுமன்ற உறுப்பினர் கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள், தொழில், வர்த்தக அமைப்புகளின் நிர்வாகி கள் ஆகியோர் அடங்கிய அமை திக் குழுவை ஏற்படுத்த வேண்டும், வட்டார, ஒன்றிய அளவிலும், நக ரங்களில் வார்டுகள் அளவிலும் அமைதிக்குழுக்களை ஏற்படுத்த வேண்டும், அமைதிக் குழுக்கள் ஆங்காங்கே கூடி மக்களிடையே உள்ள அச்சத்தைப் போக்கும் வகையிலும், சமூக நல்லிணக் கத்தை பாதுகாக்கும் வகையிலும் உரிய நடவடிக்கைகளை மேற் கொள்ள வழிகாட்ட வேண்டும் என்று ஆட்சியரை மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகள் கேட்டுக் கொள்வதாக கூறப்பட் டுள்ளது.