tamilnadu

img

மாற்று இடம் தராமல் எங்களை காலி செய்வதா? திருப்பூரில் சாலையோர வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர், மார்ச் 19- ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சாலை யோர வியாபாரிகளுக்கு மாற்று இடம் தராமல் காலி செய்வதைக் கண்டித்து திருப்பூர் மாவட்ட சாலையோர வியா பாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரில் சங்கத்தின் மாவட்டச் செயலா ளர் பி.பாலன் தலைமையில் வியாழ னன்று இந்த ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில் அடையாள அட்டை வைத்திருப்போருக்கு அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வழங்க வேண்டும். நல வாரிய மனுக்களை பரிசீலித்து பணப்பலன்களை உடனே வழங்க வேண்டும். வட்டி இல்லாத வங்கிக் கடன் வழங்க வேண்டும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நான்கு மண்டலங்க ளில் கட்டப்படும் 1500 கடைகளில் தரைத்தளத்தை சாலையோர வியா பாரிகளுக்கு வழங்க வேண்டும் உள் ளிட்ட கோரிக்கை முழக்கங்கள் எழுப் பப்பட்டன. சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் சி.மூர்த்தி கோரிக்கை களை வலியுறுத்திப் பேசினார். சங்கப் பொருளாளர் கே.ராமர் உள்பட வியா பாரிகள் திரளானோர் கலந்து கொண்ட னர்.

;