திருப்பூர், டிச. 15 - திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக நிர்வாகிகளுடன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர் பான இடப்பங்கீடு பேச்சுவார்த் தையில் ஈடுபட்டனர். இதில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 5 ஊராட்சி ஒன்றிய வார்டுகளில் போட்டியிடுவ தென உடன்பாடு காணப்பட்டது. ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கட்சி சின்னங்கள் அடிப்படையில் தேர்தல் நடைபெறக்கூடிய மாவட்ட ஊராட்சி வார்டு மற்றும் ஊராட்சி ஒன்றிய வார்டுகளுக்கான இடப் பங்கீடு உடன்பாடு சனிக்கிழமை ஏற்படுத்தப்பட்டது. இதில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 5 ஊராட்சி ஒன்றிய வார்டுகளில் போட்டியிடு வது என உடன்பாடு காணப்பட் டது. இதன்படி அவிநாசி ஊராட்சி ஒன்றியத்தில் 19ஆவது வார்டு, திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் 5 மற்றும் 8ஆவது வார்டு, பல்லடம் ஊராட்சி ஒன்றியத்தில் 12ஆவது வார்டு மற்றும் பொங்கலூர் ஊராட்சி ஒன்றியத்தில் 12ஆவது வார்டு ஆகியவற்றில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள். இதுதவிர இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 ஒன்றிய வார்டுகள், மதிமுகவுக்கு 3 ஒன்றிய வார்டுகள் ஒதுக்கப்பட்டது. கொமதேகவுக்கு 2 ஊராட்சி ஒன்றிய வார்டுகள், காங்கிரஸ் கட்சிக்கு 7 ஊராட்சி ஒன்றிய வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.