அவிநாசி, ஜூன் 1- அவிநாசி - திருப்பூர் சாலையில் மேட்டுப்பாளையத் திலிருந்து குடிநீர் குழாய் செல்கிறது. இதில் அவினாசி அருகே செம்பியநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட தனியார் திரு மண மண்டபம் அருகில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது. இத னால் குடிதண்ணீர் அதிகமாக வெளியேறி வருகிறது. இது சாலைகளில் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருன்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், கோடை காலத் தில் பல ஆயிரம் லிட்டர் தண்ணீர் வீணாகி வருகிறது. இந்த இடத்தில் தொடர்ச்சியாக குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு வருகின்றது. இதனை முறையாக சீரமைக்க வேண்டும் என் றனர். இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரியிடம் கேட்டபோது, உடனடியாக உடைப்பு சீரமைக்கப்பட்டு குடி நீர் வீணாவது தடுத்து நிறுத்தப்படும் என கூறினர்.