திருப்பூர், ஜூன் 9 – கழுதை தேய்ந்து கட்டெறும் பானது என்ற சொல்லாடலுக்கு ஏற்ப குடிநீர் விநியோகம் நாளுக்கு நாள் மோசமடைந்து வந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலை மையில் பொதுமக்கள் வேலம்பாளை யம் மண்டல அலுவலகத்தை முற்று கையிட்டனர்.
திருப்பூர் மாநகராட்சி 1, 5, 6 மற் றும் 12 ஆவது வார்டுக்கு உட்பட்ட தண்ணீர்பந்தல், அனுப்பர்பாளையம், அ.புதூர், பெரியார் காலனி, வேலம் பாளையம் பகுதிகளில் குடிநீர் விநி யோகம் மோசமானதாக இருந்ததால் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் பல கட்டப் போராட்டம் நடத்தப்பட்டது. இதில், மேற்கண்ட பகுதிகளில் 3 நாட்களுக்கு ஒரு முறை தலா ஒன்றரை மணி நேரம் குடிநீர் வழங்க மாநகராட்சி மண்டல அதிகாரிகள் உறுதியளித்தனர். ஆனால் அது 4 நாட்களுக்கு ஒரு முறை, 7 நாட்களுக்கு ஒரு முறை, 10 நாட்களுக்கு ஒரு முறை என்றாகி தற்போது 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய் யப்படுகிறது. இதையடுத்து, ஜூன் 8 ஆம் தேதி மனிதசங்கிலிப் போராட்டம் நடத்துவதென மார்க்சிஸ்ட் கட்சியின் வேலம்பாளையம் நகரக்ழு முடிவு செய்தது. அதன்படி, மார்க்சிஸ்ட் கட்சியினர் தலைமையில் மேற்கண்ட பகுதி பொது மக்களும் திங்களன்று மனித சங்கிலிக்குத் திரண்டனர். எனினும் காவல் துறை அனுமதி மறுத்ததால், வேலம்பாளையம் முதலாம் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இதனை தொடர்ந்து, அங்கு மண் டல உதவி ஆணையர் வாசுக் குமாரிடம் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ரங்கராஜ், நகரச் செயலாளர் வி.பி.சுப்பிரமணியம் உள்ளிட்டோர் மக்களின் பிரச்சனைகளை எடுத்துக் கூறி, கோரிக்கை மனு அளித்தனர். குறிப்பாக, பெரியார் காலனி மேல் ல்நிலைத் தொட்டியில் நீரேற்றி குடி நீர் முறையாக வழங்க வேண்டும். ஏற்கெனவே ஒப்புக் கொண்டபடி அனைத்துப் பகுதிகளிலும் 3 நாட்க ளுக்கு ஒரு முறை ஒன்றரை மணி நேரம் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும். குடிநீர் குழாய் பழுதுகளை உடனுக்குடன் சரி செய்ய வேண்டும், நான்காவது குடிநீர் திட்டப் பணிக ளுக்கும், பழுது நீக்கத்துக்கும், புதிய குழாய் பதிப்புக்கும் தோண்டிய குழி கள் நீண்ட நாட்களாக மூடப்படாமல் இருப்பதை உடனடியாக மூடி விபத் துகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக மண் டல உதவி ஆணையர் வாசுக்குமார் உறுதியளித்த நிலையில் போராட்டம் முடிவுக்கு வந்தது.