திருப்பூர், ஜூன் 8 – திருப்பூர் மாவட்டத்தில் கிராமம், நகரங்களில் குடிநீர் பிரச்சனை யையும், பட்டா பிரச்சனையையும் தீர்க்க வேண்டும் என்று ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் வளர்ச்சிப் பணி கள் ஆய்வுக் கூட்டத்தில் கோரிக்கை வைத்தனர். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் வெள்ளியன்று மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தலை மையில் ஆய்வுக் கூட்டம் நடை பெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர்கள் கே.என். விஜயகுமார், சு.குணசேகரன், என்.நடராஜன், உ.தனியரசு மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். பல்லடம் எம்எல்ஏ என்.நட ராஜன் பேசும்போது, கிராமப்புற மக்கள் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிகள் கட்ட வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். இதன் மூலம் தண்ணீர் பிரச்சினை தீரும் என நினைக்கின்றனர். அதே போல் சமுதாயக் கூடங்கள் இருந் தால் திருமணம் உள்ளிட்ட விஷேச நிகழ்வுகளுக்கு பயன்படுத்து வார்கள். ஆகவே இந்த இரு விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். பல்லடம் அறிவொளி நகர் மக்களுக்குப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக பட்டாக்களை அனைவருக்கும் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்துதர வேண்டும். இது தொடர்பாக வருவாய்த்துறையினர் குழுவாக இணைந்து உரிய கவனம் செலுத்தினால் இப்பிரச்சினைக்கு தீர்வு காண இயலும். பல்லடம் தொகுதியில் திருப்பூர் மாநகரின் 10 வார்டுகள் வரு கின்றன. ஆனால் சில வார்டு களுக்கு மட்டும் இரண்டு நாட் களுக்கு ஒருமுறை தண்ணீரும், சில வார்டுகளுக்கு 8 நாட்களுக்கு ஒரு முறை என தண்ணீர் வழங்கப் படுகிறது. இதனால் கடும் குழப்பம் நிலவுகிறது. ஆகவே அனை வருக்கும் சீராக தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அதேபோல் தெற்கு தொகுதி எம்எல்ஏ சு.குணசேகரன் பேசும் போது, கர்ப்பிணி பெண்களுக்கு 3 மற்றும் 4ஆவது மாதத்தில் வழங்க வேண்டிய இரும்புச் சத்து மாத்திரை களைக் காலதாமதமாக வழங்குவ தால் பயனில்லை. உரிய காலத்தில் வழங்கி அவர்களுக்குப் போய்ச் சேருவதைக் கண்காணிக்க வேண்டும் என்றார். மேலும் திருப்பூர் நகரில் குடியிருப்புகள், திருமண மண்டபங்களில் கூட இடுப்பளவு தண்ணீர் தேங்குகிறது. இதையெல்லாம் மாநகராட்சி கவனத்தில் கொண்டு, அங்குள்ள ஆக்கிரமிப்பு மற்றும் சாக்கடை அடைப்புகளை சுத்தம் செய்ய வேண்டும். பூலவாரி சுகுமார் நகரில் குடியிருந்து வரும் இடம், குடிசை மாற்று வாரியத்துக்கு சொந்த மானது என அலுவலர்கள் சொல்லி பொதுமக்களும் பணம் செலுத்தி உள்ளனர். அவர்களுக்குப் பத்திரம் இன்னும் வழங்கப்படாமல் உள்ளது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் சர்வேயர்கள் தன்னிச் சையாகச் செயல்படுகின்றனர். தனியார் நிலத்தை அளவெடுக்க தீவிர முனைப்பு காட்டுகின்றனர். இது தொடர்பாக ஆட்சியர் தனி கூட்டம் ஏற்பாடு செய்து, எச்ச ரிக்கை செய்ய வேண்டும். 4ஆம் குடிநீர் திட்டம் ஒரே வார்டுக்குள் சிலருக்கு விடுபட்டும், சிலருக்கு சேர்க்கப்பட்டு பல்வேறு குளறு படிகள் நடக்கின்றன. 4-ம் குடிநீர் திட்டம், சீர்மிகு நகரம் (ஸ்மார்ட் சிட்டி) மற்றும் மாநகராட்சி என தனித்தனியாக வீடுகளுக்கு இணைப்புகள் வழங்கினாலும், அவற்றை மொத்தமாக வழங்கி னால்தான் பொது மக்கள் மகிழ்ச்சி அடைவர். அதைவிட்டுவிட்டு தனித் தனியாக பிரித்து வழங்கும்போது மக்களிடம் அதிருப்தியே மே லோங்கும் என்றார்.