tamilnadu

img

நெடுஞ்சாலை பராமரிப்புப் பணியை தனியாருக்கு வழங்காதே நெடுஞ்சாலைத்துறை சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

அவிநாசி, செப். 7- நெடுஞ்சாலை பராமரிப்பு பணியை தனியாருக்கு வழங்கும் கொள்கை முடிவை ரத்து செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணி யாளர் சங்கத்தினர் அவிநாசி உதவி கோட்டப் பொறி யாளர் அலுவலகம் முன்பு திங்களன்று ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். நெடுஞ்சாலை பராமரிப்பு பணிகளை சாலைப் பணியாளர்கள் மூலம் மேற்கொள்ள தமிழக அரசு வழி வகை செய்ய வேண்டும். நெடுஞ்சாலை புதுப்பிப்பு பணி மேற்கொள்ளும் ஒப்பந்ததார்களே ஐந்தாண்டு பராமரிக்க கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து வழங்கும் நடைமுறையை கைவிட வேண்டும் என்பன உள் ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங் கத்தினர் அவிநாசி உதவி கோட்டப் பொறியாளர் அலு வலகம் முன்பு திங்களன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் உட் கோட்டத் தலைவர் ஆர்.ராஜேந்திரன் தலைமை வகித் தார். இதில், செயலாளர் ஏ. முருகேசன், பொருளாளர் ஆர்.கருப்பன், கோட்ட பொருளாளர் ஆர். ராமன், கோட்டச் செயலாளர் எம்.வெங்கிட்டான் ஆகியோர் கலந்து கொண்டனர்.