தாராபுரம், ஜூன் 11- தாராபுரம் அடுத்த கொளத்துப் பாளையம் பேரூராட்சி பகுதியில் மோட்டார் வைத்து தண்ணீர் உறிஞ்சினால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என பேரூராட்சி அலுவலர் எச்சரிக்கை விடுத் துள்ளார். தாராபுரம் கொளத்துப்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளிலும் குடிநீர் பிரச்சனைகளை சமாளிக்கவும், சீரான குடிநீர் வழங்கவும் குலுக்கப் பாளையம், நல்லிக்கவுண்டன்தோட்டம், அண்ணாநகர் மற்றும் அனைத்து பகுதி களிலும் குடிநீர் விநியோக பணிகளை செயல் அலுவலர் உமாராணி மற்றும் குடிநீர் விநியோக பணியாளர்கள் நேரடி யாக ஆய்வு செய்தனர். இதன்பின் அவர் கூறுகையில்,பழுதடைந்த ஆழ்துளை கிணறுகளில் குழாய்களை மாற்றுதல், சின்டெக்ஸ் டேங்க் குழாய்கள் மாற்றுதல், ஆழ்துளை கிணறுகளை ஆழப்படுத் துதல், மின் மோட்டார் பழுதுகளை உடனுக்குடன் சரிசெய்யும் பணிகள் நடை பெற்று வருகிறது. கொளத்துப்பாளையம் பேரூராட்சியில் அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட காவிரி கூட்டு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.அனைத்து மேல்நிலைத்தொட்டிகளும் 15 நாட்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்யப் பட்டு குளோரின் போடப்படுகிறது வறட்சியை சமாளிக்கும் வகையில் பேரூ ராட்சி பொது நிதியில் இருந்து ராம பட்டிணத்தில் புதிதாக ஆழ்துளை குழாய் கிணறு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் வறட்சி காலம் என்பதால் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். ஆழ்துளை குழாய் பொது குடி நீரை விரயம் செய்யாமல் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். குடிநீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும். பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி பேரூ ராட்சி நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என செயல் அலுவலர் உமா ராணி கேட்டுக்கொண்டுள்ளார்.