புதுதில்லி:
வர்த்தக ரீதியிலான குறுந்தகவல் விளம்பரங்களில் போலியான தகவல்களை அனுப்புவோருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தொலைத் தொடர்புத் துறை எச்சரித்துள்ளது.
போலியான குறுந்தகவல் அல்லது தகவல் அனுப்புவோரைப் பற்றிய விவரம்இல்லாமல் விளம்பரங்களை அனுப்புவோர் மீது ஆயிரம் ரூபாய் முதல் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். விதிமீறலின் அளவைப் பொறுத்து அபராதம் விதிக்கப்படும். எந்த செல்போன் எண்ணிலிருந்து தகவல் அனுப்பப்படுகிறதோ அந்த இணைப்பை நிரந்தரமாக துண்டிக்கவும் விதிமுறை உள்ளது என்றும் தொலைத் தொடர்புத் துறை தெரிவித்துள்ளது.இதற்காக துவங்கப்பட்டுள்ள, தகவல் தொகுப்பு புலனாய்வு பிரிவு (டிஐயு), போலியான பெயரில் தகவல் அனுப்புபவர்களை கண்காணிக்கும். இக்குழுவுடன் டெலிகாம் அனாலிடிக்ஸ் என்ற குழுவும் இணைந்து செயல்படும். இக்குழுவானது பயனர்களை போலியான தகவல் மூலம்ஏமாற்றுவோரிடமிருந்து பாதுகாக்க ஏற்படுத்தப்பட்டுள்ளது.இவ்விரு குழுக்களும் அரசின் பல்வேறு துறைகளுடன் இணைந்து, தொலைத் தொடர்பு சேவையை தவறாக பயன்படுத்துவோரைக் கண்டறியும். அதேபோல பொதுமக்கள் அனுப்பும் புகாரின் அடிப்படையிலும் கண்காணிப்பு செய்யும்.போலியான சிம் கார்டு உபயோ கம், போலியான அடையாள அட்டைமூலம் பெறப்பட்ட சிம் கார்டு, மொபைல் எண் மாற்றுதலில் நிகழும் மோசடி உள்ளிட்டவற்றையும் இது கண்டுபிடித்து விசாரணை மேற்கொள்ளும். பொதுமக்களின் குறைகளை தீர்ப்பதுதான் இக்குழு வின் பிரதான நோக்கமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.