tamilnadu

திருப்பூரில் டெங்கு பாதிப்பு உண்மை விபரத்தை குறுகிய நோக்கத்தில் இருட்டடிப்பு செய்யும் அரசு

திருப்பூர், டிச. 15 – திருப்பூர் மாவட்டத்தில் பல் வேறு பகுதிகளில் பரவலாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருக் கும் நிலையில் அரசு நிர்வாகம் உண்மையான விபரத்தை வெளிப் படுத்தாமல் இருட்டடிப்புச் செய்து நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக திருப்பூர் அருகே முதலிபாளையம் ஊராட்சியில் பலர் டெங்கு காய்ச்சலால் பாதிக் கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். இந்நிலையில் வெள்ளியன்று இதே வட்டாரத்தில் நாச்சிபாளை யம் ஊராட்சி பகுதியில் அஷ்விகா என்ற ஏழு வயது பெண் குழந்தை கோவை அரசு மருத்துவமனையில்  சிகிச்சை பலனளிக்காமல் உயிரி ழந்துவிட்டது. ஏறத்தாழ 30 பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்பில் சிக்கி இருப்பதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல் வெளிவந்துள்ளது. திருப்பூர் அரசு மருத்துவமனை யில் மட்டுமின்றி, தனியார் மருத் துவமனைகளிலும் டெங்கு காய்ச் சல் பாதிப்புக்காக பலர் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். இங்கு சிகிச்சை பெறும் நிலையில் டெங்கு காய்ச்சல் அறிகுறி தெரிந்தவுடன் பலர் கோவை அரசு மருத்துவம னைக்கு பரிந்துரைக்கப்படுகின்ற னர். கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கும் பலர் சிகிச்சை பெறச் செல்கின்றனர். பொது சுகாதாரத் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இது தொடர் பாக அரசு மருத்துவமனை மட்டு மின்றி தனியார் மருத்துவமனை களிலும் டெங்கு உள்ளிட்ட காய்ச் சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் பற்றிய விபரங்களை திரட்டி வருகிறது. டெங்கு காய்ச்ச லால் இறந்தவர்கள் விபரத்தையும் சேகரித்துள்ளது. எனினும் இது குறித்து முழுமை யான விபரங்களை வெளிப்படை யாக தெரிவிக்காமல் இருட்டடிப்பு செய்கின்றனர். இது பற்றி சுகாதா ரத் துறை அலுவலர்களிடம் கேட்ட போது, தேவையில்லாத அச்சம், பீதி ஏற்படுவதைத் தவிர்க்க வேண் டும் என்பதால்தான் மேலிடத்திலி ருந்து இந்த விபரங்களை சொல்ல வேண்டாம் எனக் கூறுகின்றனர் எனத் தெரிவிக்கின்றனர். பொது மக்கள் பீதியடையாமல் இருக்க வேண்டுமானால், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை முழு வீச்சில் அனைத்துப் பகுதிகளையும் உள் ளடக்கிச் செயல்படுத்த வேண்டும். ஆனால் தொலைநோக்குப் பார் வையோ, ஒருங்கிணைந்த செயல் திட்டமோ இல்லாமல் டெங்கு தடுப்புப் பணிகளை அரசு நிர்வா கம் மேற்கொண்டிருக்கிறது. குறிப்பாக மாவட்டத்தில், திருப்பூர் மாநகரம் தவிர்த்த சுற்று வட்டார ஒன்றியப் பகுதிகளில் டெங்கு காய்ச்சலைத் தடுப்பதற்கு “மாஸ் கிளீனிங்” என்ற பெயரில் மொத்தமாக ஊழியர்களை குறிப் பிட்ட பகுதிகளில் அனுப்பி தூய் மைப் பணி மேற்கொள்வது, ஊராட்சி ஒன்றிய அளவிலான அலுவலர்கள் கண்காணிப்பது என செயல்படுகின்றனர். அதே போல் திருப்பூர் மாநகரத்தில் 500க்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்களை நியமித்து டெங்கு தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக மாநகர் நல அலுவலர் கூறுகின்றார். ஆனாலும் டெங்கு பாதிப்பு கட்டுப்படுத்தப்படாமல் தொடர் கதையாகி வருகிறது. இந்நிலை யில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைமுறையும் தொடங்கி விட்ட தால் அதிலும் கவனம் செலுத்த வேண்டியிருப்பதாக ஊரக வளர்ச் சித் துறை அலுவலர்கள் கூறுகின்ற னர். இந்த சூழ்நிலையில் டெங்கு காய்ச்சல் பரவலாக தாக்கி இருப் பது  பற்றி பொது மக்களுக்கு வெளி படையாகத் தெரிவிப்பது, ஆளும் கட்சியின் தேர்தல் வெற்றி வாய்ப் பிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று குறுகிய அரசியல் நோக்கத் துடன் இந்த விசயத்தை இருட்ட டிப்புச் செய்யவும் அதிகாரிகள் துணையோடு ஆளும் அதிமுக அரசு முயற்சிக்கிறது. மழை பெய்து, குளிர்காலம் தொடங்கி இருக்கும் நிலையில் அனைத்துப் பகுதிகளிலும் குப்பை அகற்றம், கழிவுநீரேற்றம், தூய் மைப் பணியை முழுவீச்சில் செயல் படுத்தவும், பொது இடங்களில் கழி வுநீர் தேங்காமலும், கொசு உற்பத் தியை தடுத்தும், மருந்து தெளிப் பது, குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்துவதன் மூலம் நன்னீ ரைத் தேக்கி வைக்க வேண்டிய நிலையை தவிர்ப்பது, அனைத்து பகுதிகளிலும் பொது நோய்ப் பரி சோதனை முகாம்கள் நடத்துவது, குறிப்பாக குழந்தைகள், பெண்க ளுக்கு உரிய நோய்த் தடுப்பு ஏற்பா டுகளைச் செய்வது, விழிப்புணர்வு நடவடிக்கை என டெங்குத் தடுப் புப் பணியை மக்கள் இயக்கமாக மாற்றுவதன் மூலம்தான் இதைக் கட்டுப்படுத்த முடியும். ஆனால் குறுகிய நோக்கத்தில் அரசு நிர்வாகம் இருட்டடிப்புச் செய்வதால் டெங்கு நோய் பரவலைத் தடுக்க முடியாது என பெயர் குறிப்பிட விரும்பாத மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதன் அடிப்படையில் அரசு நிர் வாகம் போர்க்கால அடிப்படை யில் டெங்கு தடுப்பு பணியை மேற் கொள்ள வேண்டும் என்பதே மக்க ளின் எதிர்பார்ப்பு.