கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரண தொகை வழங்கிடக்கோரி அவிநாசியை அடுத்த கருவலூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அவிநாசி ஒன்றிய செயலாளர் கே.எம்.இசாக், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் என்.விஜயராகவன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.