திருப்பூர், மே 17 - அர்ப்பணிப்பு மிக்க கம்யூனிஸ்ட் தலைவராகத் திகழ்ந்தவர் தோழர் கே.வரதராஜன் என்று இரங்கல் நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் புகழஞ்சலி செலுத்தினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் முன்னாள் அரசியல் தலை மைக்குழு உறுப்பினரும், அகில இந் திய விவசாயிகள் சங்க முன்னாள் பொதுச் செயலாளருமான கே.வரத ராஜன் சனியன்று காலமானார். இதை யடுத்து திருப்பூர் மார்க்சிஸ்ட் கட்சி யின் மாவட்டக்குழு அலுவலகத்தில் ஞாயிறன்று அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல் பங்கேற்று தோழர் கே.வரதராஜன் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி இரங்கல் உரை ஆற்றினார். அப்போது அவர் கூறுகையில், தோழர் கே.வரதராஜன் மிகவும் எளி மையானவர். அனைவரிடமும் நகைச் சுவையுடன் பழகக்கூடியவர்.
கட்சி அமைப்புகளில் தோழர்களை இனம் கண்டு தலைமைக்கு உயர்த்தக் கூடி யவர். சாமர்த்தியமாகவும் எளிமை யாகவும் இயக்கத்தின் முடிவை ஏற்கச் செய்வதோடு அர்ப்பணிப்பு மிக்க கம்யூனிஸ்ட்டாகத் திகழ்ந்தார் என்று கே.தங்கவேல் புகழாரம் சூட்டினார். இந்நிகழ்வில் மாநிலக்குழு உறுப்பி னர் கே.காமராஜ், மாவட்டச் செய லாளர் செ.முத்துக்கண்ணன் உட்பட திரளானோர் கலந்து கொண்டு கே. வரதராஜனுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதேபோல், திருப்பூர் தெற்கு பகு தியில் பி.ஆர். நிலையம் முன்பாக இரங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் கே.உண்ணி கிருஷ்ணன், எம்.ராஜகோபால் மற் றும் தெற்கு நகரச் செயலாளர் டி.ஜெய பால் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். பல்லடம் ஜெயப்பிரகாஷ் வீதி யில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் முன்பு நடை பெற்ற அஞ்சலி நிகழ்ச்சிக்கு, மாவட் டக்குழு உறுப்பினர் ப.கு.சத்திய மூர்த்தி, ஒன்றியச் செயலாளர் ஆர். பரமசிவம் உட்பட பலர் பங்கேற்று கே.வரதராஜன் மறைவுக்கு இரங் கல் தெரிவித்தனர். இதைதவிர மாவட் டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கட்சியின் செங்கொடி அரைக்கம் பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.
சேலம்
சேலம் மாவட்டக்குழு சார்பில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் பி.ராமமூர்த்தி தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் டி. ரவீந்திரன், சிஐடியு மாநில துணைத்தலைவர் ஆர்.சிங்
காரவேலு உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டு, மறைந்த தோழர் கே.வரதராஜன் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.
தருமபுரி
தருமபுரியில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப் பினர் பி.டில்லிபாபு, தலைமையில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில், தோழர் கே.வரதராசன் உருவப் படத்துக்கு மாலை அணிவைத்து மரியாதை செலுத்தினார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.மாரிமுத்து, டி.எஸ்.ராமச்சந்திரன், விவசாயிகள் சங்க மாவட்ட செயலா ளர் சோ.அருச்சுணன், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.கிரைஸா மேரி, சிஐடியு விசைத்தறி தொழி லாளர் சங்க மாநில துணைத் தலைவர் வி.பி. சாமிநாதன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண் டனர். இதேபோல், அரூர் இடைக் கமிட்டி சார்பாக நடைபெற்ற அஞ் சலி நிகழ்வில், மாவட்டச் செயலா ளர் குமார், மாவட்டக்குழு உறுப்பி னர் பி.வி.மாது மற்றும் இடைக் குழு உறுப்பினர் கள் கலந்து கொண் டனர். பாப்பிரெட் ட்பட்டியில் நடை பெற்ற இரங்கல் கூட்டத்தில் மாவட் டக்குழு உறுப்பி னர் டி.சேகர், இடைக்கமிட்டி உறுப்பினர்கள் கண்ணகி, சொக்கலிங்கம் அன்புரோஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஈரோடு
சிபிஎம் ஈரோடு மாவட்டக்குழு அலுவலகத்தில் மாவட்ட செயற் குழு உறுப்பினர் பி.மாரிமுத்து தலைமையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செய லாளர் ஆர்.ரகுராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே. துரைராஜ், கே.ஆர்.விஜயராகவன், ஆர்.கோமதி, சி.பரமசிவம், ஜி.பழனிச்சாமி, சிபிஐ தலைவர்களில் ஒருவரான வழக்கறிஞர் திருமலை ராஜன், மாதர் சங்கத்தின் மாவட்ட தலைவர் லலிதா ,விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சண்முகவள்ளி, இந்திய தொழிற்சங்க மையத்தின் மாவட்ட தலைவர் எஸ்.சுப்பிரமணியன், மாவட்ட செயலாளர் ஸ்ரீராம் உள்ளிட்டோர் பங்கேற்று உருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர்.