tamilnadu

img

ஊரடங்கு: ஹயர் கூட்ஸ் அமைப்பு உணவு விநியோகம்

உடுமலை, மார்ச் 25- கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக் கையாக இந்தியா முழுவதும் 21நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் தமிழக ஹயர் கூட்ஸ் ஓனர்ஸ் அசோசி யேசன் சார்பில் உடுமலையில உணவு வழங்கப்பட்டது. கொரோனா தொற்றை தடுக்கும் வகை யில் கைகழுவும் வசதிகள் திங்களன்று உடுமலை பேருந்து நிலையத்தில் இரு இடங்களிலும், மற்றும் அரசு மருத்துவ மனை வளாகத்திலும் அமைக்கப்பட்டது. மேலும் அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டவர் களின் உறவினர்கள் மற்றும் ஏழைகளின் உணவின்றி அல்லல்படும் நிலையை போக் குவோம் எனும் உன்னத முடிவை தமிழக ஹையர் கூட்ஸ் ஓனர்ஸ் அசோசியேசன் உடுமலை தாலுகா கிளை நிர்வாகிகளின் அவசரக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட் டது. 21நாட்கள் ஊரடங்கு உத்தரவு அம லில் உள்ள நிலையில் உணவு தேவையுள் ளவர்களின் பசியை போக்க  உணவுத் தேவையை நிறைவேற்றும் வகையில் புதன்கிழமை முதல் 150 நபர்களுக்கான உணவு தயாரித்து விநியோகம் செய்யும் பணி தொடங்கப்பட்டது. இதில் அமைப்பின் உடுமலை தாலுகா கிளை தலைவர் அலி பாய், செயலாளர் கார்த்திகேயன், பொருளாளர் பொன்னு சாமி, பாலு சவுண்ட்ஸ் பாபு, குமரன் ரமேஷ், ரேணு சவுண்ட்ஸ் ஹரி பிரசாத், சபரி சவுண்ட்ஸ் திருமூர்த்தி, தமிழ் சவுண்ட்ஸ் கிருஷ்ணமூர்த்தி, ஆரிப் பந்தல் ஆரிப் உட்பட ஏராளமான  நிர்வாகிகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உடு மலை நகர செயலாளர் தண்டபாணி உள் ளிட்டோர் உணவு தயாரித்து விநியோகிக் கும் பணிகளில் ஈடுபட்டனர்.