tamilnadu

பழமை வாய்ந்த மரம் வெட்டி சாய்ப்பு

அவிநாசி, செப். 7- அவிநாசி அருகே பழமைவாய்ந்த வேப்ப மரத்தை  வெட்டி சாய்த்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  அவிநாசி ஒன்றியம், வேலாயுதம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பாலமுருகன் நகரில் சுமார்  60-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்ப குதியில் சாலையோரமாக வேப்பமரம், புங்கமரம் உள்ளிட்ட பல்வேறு வகையான 20க்கும் மேற்பட்ட மரங்கள் இருந்தன. இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த  ஆறுச்சாமி என்பவர் பாலமுருகன் நகர் பகுதியில் இரண்டு மாதங்களாக வீடு கட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் வியாழனன்று கட்டிடம் கட்டும் பணிக்காக அருகாமையில் இருந்த வேப்ப மரத்தை வெட்டிச் சாய்த்து விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதை அறிந்த சமூக ஆர்வலர்கள் கிராம நிர்வாக அதிகாரி தங்கராசு விடம் தகவல் கொடுத்துள்ளனர்.  இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலக உதவி யாளர் ஆய்வு மேற்கொண்டு, கைபேசி வாயிலாக  கட்டிடம் கட்டி வரும் ஆறுச்சாமியிடம் கேட்டபோது, நாங்கள் வெட்டவில்லை என்று கூறி யுள்ளார். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி மரத்தை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாகக் கிராம நிர்வாக அதிகாரி தெரிவித்தார்.