அவிநாசி, அக்.3- திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே பேர நாயக்கன்புதூர் பகுதியி லுள்ள ஒரு வீட்டில் சட்ட விரோதமாக கள்ளச்சாரா யம் காய்ச்சுவதாக அவி நாசி மதுவிலக்கு காவல் துறையினருக்கு ரகசிய தக வல் கிடைத்தது. இதைய டுத்து, அவிநாசி மதுவிலக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடேஷ், துணை ஆய் வாளர் சர்வேசுவரன் மற்றும் முத்துசாமி, விக்ரம் உள் ளிட்ட காவல் துறையினர் விரைந்து சென்று பேரநா யக்கன்புதூர் பகுதியில் திடீர் சோதனை மேற்கொண் டனர். அப்போது அப்பகு தியைச் சேர்ந்த கிட்டான் மகன் பழனிசாமி (45) என் பவர் தன்னுடைய வீட்டின் பின்புறமாக கள்ளச்சாரா யம் காய்ச்சிய போது காவல் துறையினர் சுற்றி வளைத்து பிடித்தனர். மேலும், பிளாஸ்டிக் கேனில் வைத்தி ருந்த 15 லிட்டர் கள்ளச்சாரா யத்தையும் பறிமுதல் செய்த னர்.