tamilnadu

கொரோனா தாக்குதல்:தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க ஏஐடியுசி கோரிக்கை

திருப்பூர், மார்ச் 19- கொரோனா தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் வகையில் திருப்பூர் பின்ன லாடைகளில் வேலை செய்யும் தொழி லாளர்களுக்கு முகக் கவசம், கையுறை உள்ளிட்ட உபகரணங்களை உடனடியாக வழங்க வேண்டும் என்று ஏஐடியுசி பனியன் தொழிற்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. ஏஐடியுசி பனியன் தொழிலாளர் சங்க அலுவலகத்தில் புதனன்று சங்கத் துணைத் தலைவர் கே.எம்.இசாக் தலைமையில் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் சங்கப் பொதுச் செயலாளர் என். சேகர், ஏஐடியுசி மாவட்டப் பொருளாளர் பி.ஆர்.நடராஜன், சங்க செயலாளர் ஆர். செந்தில்குமார், ஜெனரல் ஒர்க்கர்ஸ் சங்க பொதுச் செயலாளர் ஏ.ஜெகநாதன், உழைக்கும் பெண்கள் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் எம்.பஞ்சவர்ணம் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். திருப்பூர் மாவட்டத்தில் சிறிய, நடுத்தர மற்றும் பெரிய தொழிற்சாலைகளில் 50 பேரிலிருந்து 1000 பேருக்கு மேல் தொழி லாளர்கள் வேலை செய்கின்றனர். இவர்க ளுக்கு கொரோனா நோய்த் தாக்குதல் ஏற் படாமல் இருக்க அனைத்து தொழிலாளர்க ளுக்கும் முக கவசம், கையுறை உள்ளிட்ட உபகரணங்கள் உடனடியாக வழங்கப்பட வேண்டும். நோய்க்கிருமிகள் தொற்றாமல் இருக்க பணியிடங்களை முறையாக சுத் தப்படுத்த வேண்டும், நாளொன்றுக்கு 10 முறைகளுக்கு மேல் கைகளை கழுவ வேண் டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். அதற்குத் தேவையான தண் ணீர், சோப்பு வழங்க வேண்டும். நோய்த் தொற்றின் ஆபத்து காரணமாக தொழிற் சாலைகளில் உற்பத்தி நிறுத்தப்பட்டால் அங்கு வேலை செய்து வரும் தொழிலாளர் களுக்கு முழு சம்பளத்துடன் விடுப்பு வழங்க வேண்டும். ரயில் நிலையம், பேருந்து நிலையங்க ளில் மருத்துவ முகாம் அமைத்து வெளி மாநில, வெளி மாவட்ட தொழிலாளர்கள் வரும்போது ஆய்வு செய்ய வேண்டும். நோய் அறிகுறி தென்பட்டால் போதிய மருத்துவ வசதி ஏற்பாடு செய்ய வேண்டும். அரசு மருத்துவமனையில் போதிய முன் னேற்பாடுகள் செய்ய வேண்டும். மக்கள் நெருக்கமாக வாழும் குடியி ருப்புப் பகுதிகளில் போர்க்கால அடிப்ப டையில் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ள வேண்டும்.  தொழிலாளர்களும், பொது மக்களும் அச்சமின்றி வாழ உரிய நட வடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஏஐடி யுசி கேட்டுக் கொண்டுள்ளது.