tamilnadu

img

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதித்தோர் 108 பேர்

திருப்பூர், ஏப். 18 – திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 108 பேராக அதிகரித்துள்ளது.   திருப்பூர் மாவட்டத்தில் ஏற்கெனவே கொரோனா நோய் தொற்றுக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை 80 பேராக இருந்தது. இந்நிலையில் கடந்த இரு தினங்களாக இம்மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் யாரும் இல்லை என சுகாதாரத் துறை தெரிவித்தது. சனிக்கிழமை சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையில், திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஏற்கெனவே கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் திருப்பூர் மாநகருக்குட்பட்ட பகுதிகளில் 7 பேர், திருப்பூர் ஒன்றியத்தில் 12 பேர், அவிநாசி ஒன்றியத்தில் 4 பேர், பல்லடம் ஒன்றியத்தில் 2 பேர் மற்றும் காங்கேயம், பொங்கலூர், உடுமலைபேட்டை வட்டாரத்தில் தலா ஒருவர் என மொத்தம் 28 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

;