திருப்பூர், பிப். 5 – திருப்பூர் ஆண்டிபாளையம் பொது சாயக்கழிவுநீர் சுத்தி கரிப்பு நிலையத்தில் ஒப்பந்த நிறுவனத்திற்கு தர வேண்டிய தொகையை தராததுடன், ஒப்பந்தத்தை ரத்து செய்யவும் முயல்வதாகக் கூறி அந்நிறுவன பணியாளர்கள் பொது சுத்திகரிப்பு நிலையம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட னர். இது பற்றி விபரம் வருமாறு: திருப்பூர் ஆண்டிபாளையம் பகுதியில் அமைந்துள்ள பொது சாய சுத்திகரிப்பு நிலையத் தில் எக்கோப்யூர் என்ற நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் தனது பணியாளர்களை நியமித்து கடந்த ஒன்பது ஆண்டுக ளாக பணியாற்றி வந்துள்ளது. இந்நிலையில் இந்த ஒப்பந்த நிறுவனத்திற்கு பொது சுத்திகரிப்பு நிலைய நிர்வாகம் ரூ.3 கோடியே 28 லட்சம் ஒப்பந்தத் தொகை நிலுவை வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த தொகையை வழங்காமல் காலதாமதம் செய்து, தற்பொழுது ஆட்களை அனுப்பும் பணியைத் தற்காலிகமாக நிறுத்தும் படி மின்னணு கடிதம் அனுப்பியுள்ளனர் எனவும், ஒப்பந் தத்தை ரத்து செய்யும் நோக்கத்தில் சுத்திகரிப்பு நிலைய நிர்வாகிகள் செயல்படுவதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக 35 தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. தங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை செலுத்தினால், தொழிலாளர்க ளுக்கு சேர வேண்டிய ஊதியத்தை கொடுக்க முடியும் என வலியுறுத்தி, எகோப்யூர் நிறுவனத்தின் மூலம் பணியாற் றும் தொழிலாளர்கள் ஆண்டிபாளையம் பொது சாய சுத்தி கரிப்பு நிலையம் முன்பு சாலையில் அமர்ந்து தர்ணா போராட் டத்தில் ஈடுபட்டனர்.