tamilnadu

img

பெரியகருணைபாளையத்தில் சாலை பணிக்கு அடிக்கல்

அவிநாசி மே.19 அவிநாசி அருகே பெரியகருணைபாளைய பகுதியில் ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் சாலை வசதி ஏற்படுத்திட செவ்வா யன்று  அடிக்கல் நாட்டப்பட்டது திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியம் பெரியகரு ணைபாளையத்தில் சுமார் 100 மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தோர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் பெரிய கருணைபாளையத்திலிருந்து மாரியம்மன் கோவில் வரை சாலை வசதி இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். ஆகவே, இப்பகுதிக்கு சாலை வசதி வேண்டி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.  இதையடுத்து அவினாசி ஊராட்சி மன்ற தலை வர் ஜெகதீசன், ஒன்றிய கவுன்சிலர் மணி (எ) சந்திர சேகர் ஆகியோர் ஊராட்சி ஒன்றிய நிதியிலிருந்து மூன்று  லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சாலை வசதி ஏற்படுத் திட நிதி ஒதுக்கீடு செய்து, அதற்காக செவ்வாயன்று  அடிக்கல் நாட்டினர். இதில்  ஏசிஎம்எஸ் தலைவர் மு.சுப்பிரமணி,  ஆக்ரோ சொசைட்டி இயக்குனர்  காவிரி  ரமேஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊராட்சி மன்ற  உறுப்பினர் ராயன் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஜோதி ஜெகநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.