tamilnadu

img

சேவூர் - சத்தி சாலையில் பாலம் அமைக்கும் பணி தொய்வு

அவிநாசி, ஆக. 31 – சேவூர் - சத்தி சாலையில் ராமியம் பாளையம் அருகே தொய்வடைந்துள்ள பாலம் அமைக்கும் பணியை விரைவு படுத்த வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர். அவிநாசி வட்டம், சேவூர் ரவுண்டானா பகுதியிலுள்ள சாலை வழியாக பண்ணாரி, சத்தி, மைசூர், பெங்களூருவுக் கும், மறுமார்க்கமாக அவிநாசி, திருப்பூருக்கும் தினசரி அரசு மற்றும் தனியார் பேருந்துகள், கனரக வாகனங்கள், பள்ளி, கல்லூரி வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின் றன. தற்போது இந்த சாலை விரிவாக்கப் பணிக்காக, சேவூர் அருகே ராமியம் பாளையம்- தண்டுக்காரன்பாளையம் இடையே உள்ள தரைமட்டப்பாலம் இடித்து பாலத்தை விரிவுபடுத்தும் பணிகள் தொடங்கப்பட்டது. கடந்த இரண்டு மாதங்களாக இப்பணி மிகவும் தொய்வாக நடை பெற்று வருகிறது.  இப்பாலம் வேலை நடைபெறுவதால், வாகனப் போக்கு வரத்திற்கு தற்காலிகமாக மாற்று சாலை அமைக்க வேண் டும். ஆனால் மண் சாலை அமைக்கப்பட்டு வாகனங்கள் சென்று வருகின்றன. தற்போது பருவ மழையால் இந்த மண் சாலை குண்டும் குழியுமாக மிகவும் மோசமடைந் துள்ளது. அதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்குள் ளாகி வருகிறார்கள்.  இது குறித்து நெடுஞ்சாலை துறையினரிடம் கேட்ட போது, கடந்த இரு வார காலமாக தொடர் மழையால் பாலம் அமைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது. அடுத்த 2 மாத காலத்திற்குள் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு பாலம் பயன்பாட்டுக்கு வரும் எனத் தெரிவித்தனர்.