மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கே.தங்கவேல் படத்திறப்பு நிகழ்ச்சி - நினைவு சிறப்பு மலர் வெளியீடு நவம்பர் 1 ஞாயிறன்று திருப்பூரில் நடைபெற்றது. தோழர் கே.தங்கவேல் உருவப்படத்தை கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் திறந்து வைத்தார். திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன், கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன், மாநிலக்குழு உறுப்பினர்கள் கே.பாலபாரதி, கே.காமராஜ், மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.