tamilnadu

அரசுப் பள்ளிகளில் 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை துவக்கம்

திருப்பூர், ஆக. 24 - திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி களில் 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை திங்களன்று துவங்கியது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஆக.24ஆம் தேதி முதல் 11 ஆம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை துவங்கும் என கல்வித் துறை அறிவித்திருந்தது. இதையடுத்து மாணவர்கள் தங்கள் பெற்றோர்களுடன் வந்து மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்து பள்ளியில் கொடுத்தனர். மாண வர்கள் அதிக அளவில் கூடுவதைத் தவிர்க்கும் பொருட்டு திங்களன்று விண்ணப்பங்கள் மட்டுமே பெறப்பட்டு வருவதாகவும், செவ்வாய்க்கிழமை முதல் மாணவர்கள் தொலைபேசி வாயிலாக அழைக்கப்பட்டு, நேரம் ஒதுக்கி சேர்க்கை நடைபெறும் எனவும் ஆசிரியர்கள் தெரிவித்த னர். மேலும், மாணவர்களும் பெற்றோர்களும் ஆர்வத்து டன் அரசுப்பள்ளிகளில் சேர்ந்து வருவதாக மகிழ்ச்சி தெரி வித்தனர்.

;