திருப்பூர், மார்ச் 19 – திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றி யக்குழு அலுவலகம் முன் பாக மறைந்த தோழர் எஸ். கந்தவேல் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் கடைப்பிடிக்கப்பட்டது. பொங்கலூர் வட்டாரத்தில் மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் விவசாய சங்கத்தை உருவாக் குவதில் முக்கியப் பங்கு வகித்த எஸ்.கந்தவே லின் இரண்டாவது ஆண்டு நினைவு நாள் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.குமார், பொங்க லூர் ஒன்றியச் செயலாளர் சிவசாமி, மாவட் டக்குழு உறுப்பினர்கள் ஜி.சம்பத், எஸ். பவித்ராதேவி உள்பட கட்சி அணியினர் திரளானோர் கலந்து கொண்டு தோழர் கந்தவேலை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தினர்.