அவிநாசி, மார்ச் 2- அவிநாசி அருகே கஞ்சா வியாபாரி கைது செய்யப்பட்டார். அசாம் மாநிலத்தை சேர்ந்த ஷாஜகான் மகன் முகமது சோபன் (24). இவர் அவிநாசி அருகே தேவம்பாளையத்தில் தங்கி அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகி றார். இந்த நிலையில் இவர் கஞ்சா பொட்டலம் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக அவிநாசி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இத்தகவல் பேரில் போலீசார் முகமது சோபன் வீட்டை சோதனை செய்தபோது அங்கு கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதை எடுத்து கஞ்சா வைத்திருந் ததாக கைது செய்யப்பட்ட அவர் அவிநாசி நீதிமன் றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டார். அவரிடமிருந்து 40 கிராம் கஞ்சா மற்றும் ரூ.600-ஐ போலீசார் பறிமுதல் செய்தனர்.