tamilnadu

பல்லடத்தில் கடத்தப்பட்ட குழந்தை மீட்பு

திருப்பூர், பிப். 3– திருப்பூர் மாவட்டம், பல்லடம் பகுதியில் கடத்தப்பட்ட குழந்தையை காவல் துறையினர் விரைந்து செயல்பட்டு மீட்டனர். பல்லடம்- மங்கலம் சாலை அரசங்காட்டில் குடியிருந்து  வருபவர் மா.சுடலைராஜா (24). இவரது தந்தையிடம்  வீட்டு வேலை கேட்டு வந்த முன்பின் அறிமுகம் இல்லாத பெண்,  சுடலைராஜாவின் மூன்று வயது பெண் குழந்தையை கடந்த  ஜன.24ஆம் தேதியன்று கடத்திச் சென்று விட்டார். இது குறித்து பல்லடம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப் பட்டது. இதன் அடிப்படையில் குழந்தை கடத்தல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து பல்லடம் காவல் கண்காணிப்பாளர் முருகவேல் தலைமையில், காவல் ஆய்வாளர் ரமேஷ்  கண்ணன், உதவி ஆய்வாளர்கள் விஜயகுமார், அமல்  ஆரோக்கியதாஸ், ஏட்டு பாலமுருகன், காவலர்கள் சேது மாதவன், அருள், கதிர்வேல், சைபர் பிரிவு தலைமை  காவலர்கள் பாலுச்சாமி, சந்தானம் ஆகியோரைக் கொண்ட  மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டது. திண்டுக்கல், பழனி, கோவை, திருப்பூர் மற்றும் ஈரோட்டில் காவல் துறையினர் தேடுதல் பணியில் ஈடுபட்ட னர். குழந்தையின் புகைப்படம் மற்றும் சிசிடிவி காட்சியை  அடிப்படையாகக் கொண்டு துப்புதுலக்கினர். இந்நிலை யில், கடத்தப்பட்ட குழந்தையுடன் ஈரோட்டில் ஒரு  பெண் நின்று கொண்டிருந்தார். அவரை காவலர்கள்  பிடித்து விசாரித்தனர். இதில் அந்த பெண் சேலம்  குள்ளம்பட்டியைச் சேர்ந்த மல்லிகா (எ) அல்போன்ஸ் மேரி  (24) எனத் தெரிந்தது. அவரை காவலர்கள் கைது செய்து குழந் தையைக் கைப்பற்றி பல்லடம் காவல் நிலையம் அழைத்து வந்தனர்.   குற்றவாளியைக் கண்டுபிடித்து குழந்தையை மீட்ட  காவல் படையினருக்கு காவல் கண்காணிப்பாளர் திஷா மிட்டல் பாராட்டுத் தெரிவித்தார்.