tamilnadu

அவிநாசி அருகே கார் கவிழ்ந்து விபத்து

அவிநாசி, அக். 29- அவிநாசி அருகே கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளா னதில், 3 பேர் படுகாய மடைந்தனர். அவிநாசி பழங்கரை புற வழிச்சாலை அருகே கோவையிலிருந்து ஈரோடு நோக்கி சென்று கொண்டி ருந்த கார் மீது பின்னால் வந்த மற்றொரு வாகனம் மோதியதால் கார் கவிழ்ந் தது. இந்த  விபத்தில் ஈரோடு, வீரப்பன் சத்திரம் எம்ஜி ஆர் வீதியைச் சேர்ந்த வெங்கடாசலம் மனைவி கோமதி (45), இவரது மகன் கள் கோகுல் (25), ஆதித் தன் (23) ஆகியோர் படு காயமடைந்தனர். இவர் களை அருகிலுள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பெரு மாநல்லூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனும தித்தனர். இவ்விபத்து குறித்து அவிநாசி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர்.