திருப்பூர், ஜன. 22- வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஐந் தாண்டுகள் தொடர்ந்து புதுப்பித்து எவ்வித வேலை வாய்ப்பும் கிடைக்காத படித்த இளைஞர்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு விடப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம் ரூ.200, மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.600ம், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300,மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.600 உதவித்தொகை வழங்கப் படுகிறது. இதேபோல் 12ஆம் வகுப்புதேர்ச்சி பெற்ற வர்களுக்கு ரூ.400, மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.750ம், பட்டதாரி மற்றும் முதுநிலைப்பட்டதாரிகள் ரூ.600 மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை யாக தமிழக அரசால் வழங்கப்படுகிறது. உதவித்தொகை பெறும் நாளில் வயது வரம்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 45ம்,இதர வகுப்பினருக்கு 40 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு உச்ச வரம்பு ஏதும் இல்லை. ஆனால் பதிவு செய்து ஓராண்டு முடிந்திருக்க வேண்டும். மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வருமானச்சான்றுதேவையில்லை.மனுதாரர் பள்ளி அல்லது கல்லூரிப்படிப்பை தமிழகத்திலேயே முடித்து இங்கேயே 15 ஆண்டுகள் வசித்தவராக இருக்க வேண்டும். மனுதாரர் முற்றிலுமாக வேலையில்லாதவராக இருக்க வேண்டும். கல்வி நிறுவனத்திற்கு தினமும் சென்று படிக்கும் மாணவ, மாணவியராக இருக்கக்கூடாது. ஆனால் தொலைதூரக்கல்வி மற்றும் அஞ்சல் வழிக்கல்வி கற்கும் மனுதாரர்கள் விண்ணப்பிக்கலாம். மனுதாரர் உதவித்தொகை பெறும் காலங்களில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவினைத் தொடர்ந்து புதுப்பித்து வருபவ ராக இருக்க வேண்டும். 5 வருடங்கள் வேலையில்லாமல் காத்திருப்பவர் www. tnvelaivaaippu.gov.in இணையதளம் வாயிலாகவும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரிலும் படிவத் தினை பெற்று பூர்த்தி செய்துபிப்ரவரி இறுதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அனைத்து போட்டித்தேர்வுகளுக்கும், இணையதளம் மூலமாக விண்ணப்பம் செய்வதற்கும், தேர்வு மையங்களுக்கு சென்று வருவதற்காகவும் இத் தொகை வழங்கப்படுகிறது. எனவே, உதவித்தொகை பெறுவதற்கு தகுதியுடைய வர்கள் உடனடியாக திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.